|
|
|
|
விசிராந்திப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
காத்தருள்பு
ரிந்தகரு ணைக்கடவுள் வேந்தன்
ஏத்தரிய சேவடியி றைஞ்சியித யத்துப்
பூத்தவுணர் வோடுரிய பொற்புறுத வத்து
மாத்தகைய ரோடளவ ளாவினன்ம கிழ்ந்தே.
|
1 |
|
|
|
|
தம்மகவு
கண்டுருகு தாயரென வன்பின்
அம்மனைய ருங்கசிய கத்துவகை பொங்கிச்
செம்மொழிப கர்ந்துமறை யோய்சிறிது போழ்து
மம்மரக லிம்மனைவ திந்தகறி யென்றார்.
|
2 |
|
|
|
|
மாதவவ
ழிப்படுகை வல்யவயி ராக்ய
வேதியனு நன்றெனவி ருப்புடன்வி ளம்ப
மேதகைய சிற்சுகம்வி சித்தெனவி ளங்கும்
போதமுறு புத்தகவ ரங்குழைபு குந்தார்.
|
3 |
|
|
|
|
வரங்குலவு
புத்தகம லிந்துமதி தோயும்
அரங்குலௌஉ கீகவச டற்றெழில மைந்த
உரங்குலவி நின்றதையு ணர்த்துமறை வாணன்
பரங்குலவு ஞானமுறை பள்ளியறை யென்றான்.
|
4 |
|
|
|
|
அருந்தவம
டந்தையர றப்புறம மைத்த
பெருந்தகைகு ணாதிசய மாதியபி றங்கித்
திருந்துமுறை சிற்சிலதி றந்தினிய செஞ்சொல்
விருந்தினனு ளங்கொள்வி ரித்திடுவ தானார்.
|
5 |
|
|
|
|
அலகில்புவ
னங்களைய மைத்தியல றத்தை
நிலையுறநி றுத்தியரு ணீதிபுரி சீயோன்
மலையரச னோர்குமரன் வந்தவத ரித்த
குலவரிசை யீதெனவி ளக்கினளோர் கோதை.
|
6 |