பக்கம் எண் :

278

  ஆக்கரிய சத்திரமி தாக்கியவ நாதி
கோக்குமர னீண்டுபுரி கோதில்கிரி யாதி
மீக்கருணை மீட்டவர்பெ யர்த்திறம்வி ளங்க
வாக்கியமெ டுத்தினிது ரைத்தனளோர் மங்கை.

7
   
  மீட்சியுறு மன்பதைகள் வீட்டுலக மேவி
ஆட்சியுறு மாளிகைய னந்தமழி வில்லா
நீட்சியுறு சிற்சுகநி றைக்கநிறை வெய்தி
மாட்சியுறு மென்பதைவ குத்தனளோர் மாது.
8
   
  சத்துருபு றக்கொடைத ரச்சமரில் வென்று
பத்தர்சிலர் ராஜ்யபரி பாலனந டத்தி
முத்திநக ரத்திறைமொ ழிந்ததிரு வாக்குத்
தத்தவர முற்றபடி சாற்றினளோர் தையல்.
9
   
  அண்டருல கத்தரச னாணையின மைந்த
தொண்டர்சில ரங்கியெரி சூளையுளு லாவிச்
சண்டவரி மாவொடுத ரித்ததையெ டுத்து
விண்டனள்ம னங்கரைய மெல்லியலொ ருத்தி.
10
   
  நண்ணலர டர்ந்துயிர்ந டுங்கிபுட னைய
எண்ணிரிய வாதைகளி யற்றியடு போழ்தும்
அண்ணலடி யார்பலர றத்திறமி ழுக்கா
வண்ணமிதி தென்றுரைவ குத்தனளோர் வல்லி.
11
   
  வானமொடு பூமிநிலை மாறுகினு மாறா
மேனிகழ்வ தென்றுரைசெய் சம்பவ விதங்கள்
தானமிசை முற்றிமுறை சான்றுபடு மென்னா
ஞானமிகு தீர்க்கமொழி காட்டினளோர் நாரி.
12
   
  கொன்புலையர் பைப்பயவ ளர்த்தெரிகொ ளுத்த
என்புகரு கித்தனுவெ ரிந்துபடு போழ்தும்
மன்புதல்வ னன்பையுண்ம தித்திருவர் மாய்ந்த
அன்பின்வலி நன்குறவி ளக்கினளோ ரம்மை.
13
   
  தற்பாகு மாரனதி சற்குணவி காசம்
அற்புதவி தங்கள்பர மாச்சரிய ஞானம்
பற்பலசு கிர்த்தியப லங்களிவை யெல்லாம்
பொற்புறவி ளக்கினர்பல் பூவையர்கள் மாதோ.
14