பக்கம் எண் :

279

  இத்திறம தங்கியரி யம்புமொழி கேட்டும்
உத்தமமொ ழித்திறமு ணர்ந்துமறை வாணன்
வித்தகம றைப்பொருள்வி ளக்குமிதி காச
சத்தியம் றிந்துமகிழ் வோடுதரி கொண்டான்.

15
   
  போயதொரு நாண்மறுப கற்பொழுது போந்து
மேயதென மாதவிகள் வேதியனோ டேகித்
தூயதிரு மந்திரசு யம்பிரபை தோய்ந்த
ஆயுதவ ருக்கநிறை சாலையைய ணைந்தார்.
16
   
                  வேறு
   
  கண்கவருங் கவினார்ந்த கனகமணி மண்டபத்துப்
பண்கவரு மொழிமாதர் பலர்குழுமிப் பணிந்தேவ
விண்கவர மிளிர்பத்தி வேதியன்றன் முகநோக்கி
எண்கவரும் படைக்கலங்க ளியன்முறைமை
                             யெடுத்துரைப்பாள்.
17
   
  பேராழி கரைபுரண்டு பிறழாமற் பவஞ்சத்தை
ஓராழி யெனவுருட்டி யுதித்தொடுங்கித் தினஞ்செய்வான்
ஏராழிக் கதிர்நிறுவி யியற்கைமுறை புரிதருமச்
சீராழிப் படையீண்டு திகழ்கின்ற திறநோக்காய்.
18
   
  சலங்காட்டி யழிக்காது தயைகாட்டி யரசர்பிரான்
புலங்காட்டிப் புறச்சமயப் புரைகாட்டி யிரக்ஷணிய
நலங்காட்டிக் குணங்காட்டி நயங்காட்டிப் பகைப்புலத்தை
வலங்காட்டி யிழுக்கின்ற மணிப்பாச மிவைகாணாய்.
19
   
  பாருதித்த விளவரசன் பகைப்புலத்துக் கொடுங்கூளி
காருதித்த தெனவெதிர்ந்து கைகலப்பக் கொழுங்குருதி
வேருதிக்கப் பொருதழித்து விறல்புனைந்த மேனாளிக்
கூருதித்த படைக்கலங்கள் குறிக்கொண்ட படிகாணாய்.
20
   
  ஒருகானம் பெருமானிங் குபவாசம் புரிகாலை
அருகாக வெதிரூன்றி யடரலகை பெருங்காற்றிற்
சருகாகப் பறந்தோடிச் சமர்தொலையத் தனிவழங்கும்
இருகூர்ப்பட் டயங்களிவை யெந்துணைவ வெதிர்நோக்காய்.
21
   
  உத்தமர்கை யெடுத்துந்தி யொருபுயங்கப் பஃறலையும்
பித்தளைந்த கொடுங்காமப் பேய்த்தலையும் பிரபஞ்சச்
சத்துருவின் பெருந்தலையுந் தகர்ந்துசித றிடப்புடைத்த
பத்திவயி ராக்யமெனும் பருந்தண்ட மிவைபாராய்.
22