பக்கம் எண் :

280

  வலிந்திழுக்க விழுக்கவளை மானதகோ தண்டமொடும்
நலிந்தனற்கு மிடையாத நார்க்கயிற்று நாணியொடும்
மலிந்துதவு நல்லிதய மந்திராத் திரப்புட்டில்
பொலிந்திலங்கு வனவேத புங்கவளிங் கிவைகாணாய்.

23
   
  குத்திரமித் தியமாதி கொடும்படைகள் பலவீசி
நித்தியசத் துருவாய நீசப்பேய் மகார்குழுமி
எத்திசையு மலைந்தாலு மிகலழிக்கும் விறலளிக்குஞ்
சத்தியமா மரைக்கச்சை தயங்குவன தனிநோக்காய்.
24
   
  ஏவாளை வசப்படுத்தி யிகங்கெடுக்குங் கெடுதோஷி
ஓவாது படைசிதறி யோச்சியெறிந் துடற்றுகினுஞ்
சாவாமற் செய்தருமந் தலைகாக்கு மெனக்காக்குந்
தாவாத விரக்ஷையெனுந் தலைச்சீரா விவைகாணாய்.
25
   
  கரையிகந்த பெருந்துன்பக் கடுங்கூர்முட் கணையானுங்
குரைபழிபொய் நிந்தையெனுங் கொடுஞ்சிலீ முகத்தானும்
வரையினையுந் தரையாக்கும் வறுமைச்சா யகத்தானும்
புரைபடா நீதியெனும் பொற்கவசம் பலபாராய்.
26
   
  குருசுயர்த்த பெருமானைக் குறிக்கொண்டு மனந்திரும்பி
விரசுமினோ சுவிசேஷ விபுலத்தென் றோலிடுமோர்
அரசர்பிரா னூழியத்துக் கனவரதா யத்தமென
உரைசெறியும் பாதரக்ஷை யுலப்பிலமற் றிவைநோக்காய்.
27
   
  பெரியபூ தரங்களையும் பெயர்த்தெறியும் பித்தளைந்து
திரிபுவன கோசரத்தைத் திரணமா யவமதிக்குந்
துரியபூ மியைத்துருவிச் சுலவிவரு மன்பினொடு
கிரியைசெயும் விசுவாசக் கேடகங்க ளிவைநோக்காய்.
28
   
  நீசனர சியறொலைத்து நிமலாவி கிறிஸ்துவெனும்
ஈசனர சியனிறுவ வெதிரூன்றும் ரணகளத்துப்
பாசறையிற் படைவீரர் படைக்கலமந் திரஞ்செபித்துப்
பூசைபுரி யுபகரணம் பொலிந்திலங்கு வனபாராய்.
29
   
  விண்ணுடுவிற குணிப்பரிய படைவீரர் மிகுத்திடினும்
எண்ணிறந்த படைக்கலங்க ளேற்றமுறு மிழுக்காவால்
கண்ணியகூர் மழுங்காமற் கருதுகுறி விலகாமற்
புண்ணியம்போற் பொருதுவிறல் புனைவனமற்
                                 றிவைநோக்காய்.
30