|
வித்தகமெய்ச்
சுவிசேஷ விசுவாசி யிவையெல்லாம்
பத்தருக்குப் பொதுவாய படைக்கலங்கள் பரஜீவன்
முத்தருக்கு விறல்வாகை முடிபுனைந்து முனைமுகத்திற்
சத்துருவைப் புறங்கண்ட தனிப்படைக ளிவைபாராய்.
|
31 |
|
|
|
|
பங்கமுற
வெகிப்திலொரு பதுவாதை விடுத்ததுவுஞ்
செங்கடலிற் பார்வோனைச் சேனையொடு கவிழ்த்ததுவுங்
கங்கைபெருக் கெடுத்தோடக் கருமலையைப் புடைத்ததுவும்
நங்குரவன் விதிக்கிழவன் நடுக்கைக்கோ லிதுகாணாய்.
|
32 |
|
|
|
|
மண்டலமெல்
லாந்திகைக்க வலஞ்சூழ்ந்து சூழ்ந்துலவிப்
பண்டெரிகோ மதிலிடிந்து பாழாகும் படிபருவக்
கொண்டலிடி முழக்கமெனக் கோத்தபே ரொலிகிளப்பி
எண்டிசையும் புகழ்படைத்த வெக்காள மிதுநோக்காய்.
|
33 |
|
|
|
|
வசையாக
வறுநூறு மறவோரைச் சம்கார்முன்
இசையாகப் பொருதழித்த தாற்றுக்கோ லிதுகாணாய்
பிசகாது கறுவோடு பெண்ணொருத்தி பிடித்துந்திச்
சிசராவை யுயிர்கவர்ந்த ஜெயமுளைமற் றிதுகாணாய்.
|
34 |
|
|
|
|
தொகைகண்டு
சொலவரிய பெருஞ்சேனைத்
தொகுதியெலாம்
புகைகண்டு மறைவதுபோற் பொருகளத்துத்
தொலைவெய்தும்
வகைகண்டு கீதேயோன் வன்கையின் வயப்படையாப்
பகைகண்ட திலையென்னப் பிடிபந்தம் பலகாணாய்.
|
35 |
|
|
|
|
நமராய
விஸரேற்கு நடுவனாய்ப் பகையிருட்குத்
திமிராரி யாயுலவி யொருதனியே திறல்காட்டி
அமராரைச் செயங்கொண்ட வந்நாளிற் சிம்ஸோற்குச்
சமராடுங் கைக்கருவித் தாடையெலும் பிதுபாராய்.
|
36
|
|
|
|
|
இதங்கொண்ட
வருட்டாவீ தெனுஞ்சிறுவ னெதிரூன்றி
விதங்கொண்ட பெருஞ்சேனைப் பெலிஸ்தியர்வெந்
நிட்டோட
மதங்கொண்ட பெருங்காய வல்லரக்கன் மடிந்துவிழக்
கதங்கொண்டு வீசியெறி கவண்கற்க ளிவைகாணாய்.
|
37 |
|
|
|
|
மங்கலத்தின்
னிசைமலிந்த வானுலகத் திளவரசன்
அங்கரத்தங் கொடுமீட்ட வடிமைகளைச் சூறையிட
உங்கரித்துப் பாவநர னுக்கிரத்தோ டெழுநாளிற்
சங்கரிக்க வினியெடுக்குந் தழனிறப்பட் டயங்காணாய்.
|
38 |