பக்கம் எண் :

283

  பண்ணாடு மொழிச்சியர்தாம் வேதாந்தப் பளிங்குநிலைக்
கண்ணாடி வழியாக விசுவாசக் கண்கொண்டு
விண்ணாடு புகுஞ்சிகர வியன்கிரியை வேதியநீ
உண்ணாடுங் கருத்தொன்றி நோக்குகவென் றினிதுரைத்தார்.
47
   
                  வேறு
   
  சகல கேவல மாதிய தத்துவார்த் தத்தைப்
பகரு நூனெறி கற்றிய பவித்திர னோக்கப்
புகரி லானந்த மால்வரை யியல்பெலாம் பொருந்த
நிகரில் பத்தியா நேரிழை நிகழ்த்துவ தானாள்.
48
   
  விண்ணெ றிப்படும் வேதிய மாநுவேல் விளைத்த
புண்ணி யம்புவி போர்த்துமீ தோங்கிய புரைய
மண்ணின் மன்னுயிர் வளம்பெற வழங்குமிம் மலையங்
கண்ண கன்விசும் பணவிநின் றிடுநிலை காணாய்.
49
   
  நோன்மை மிக்குயர் வேதிய நுவலரு மரசன்
ஆன்ம கோடிகட் காக்கிய வானந்த மனைத்தும்
வான்மு யங்குமிம் மலையெனத் திரண்டுரு வமைந்த
பான்மை போலுள காட்சியே தெரிப்பன பாராய்.
50
   
  கெடுத்து முப்பகை தொலைத்தமெய்க் கிறிஸ்தவ முத்தி
அடுத்த தொண்டர்க்கென் றாக்கிய வானந்த போகம்
மடுத்த நித்திய பேரின்ப மாடமா ளிகைகள்
கடுத்தி லங்குபொற் சிகரங்கள் கணிப்பில காணாய்.
51
   
  அனகன் சேவடிக் கன்புசெய் யாரண வமலன்
சினக ரந்திகழ் பயற்றறி நிழலிடு செயல்போல்
வனக ராசல நிரைபொரூஉங் கருமுகில் வளைந்து
கனக மால்வரைச் சாரலிற் கவிவன காணாய்.
52
   
  தொக்க பேரிடர் மலைமிதித் தேறிய தோன்றால்
துக்க மாயவெங் கோடையைத் திசைதிசை துரந்து
பக்க மெங்கணு நல்லறப் பயிர்வளஞ் சுரப்பக்
கக்கு தண்ணருண் மழைமுகில் கஞலுவகாணாய்.
53
   
  அறங்கு லாமனத் தந்தண வந்தரத் தமரர்
இறங்கி யேறவென் றாக்கிய வேணியீ தென்னப்
பிறங்கு வான்முகட் டிழிந்துநின் றிம்பரிற் பிறழ்ந்து
கறங்கு வெள்ளரு வித்திரள் பொலிவன காணாய்.
54