|
பொருண
யந்தெரிந் தவித்தையைப் போக்கிய புலவோய்
அருண யந்தமெய்ஞ் ஞானிய ரகமெனத் தெளிந்து
தெருண றும்புனற் றீர்த்திகை ஜீவரைப் புரக்குங்
கருணை வெள்ளமொத் தலர்வன வயின்றொறுங் காணாய்.
|
55 |
|
|
|
|
ஊன
ளாவுதுர்க் குணங்கடிந் தொதுக்கிய வுரவோய்
தேன ளாவிய கொழுமலர்ச் செழும்பயன் செருமி
வான ளாவிய ஜீவதா ருவினிழல் வயங்குங்
கான ளாவுதண் ணறுஞ்சுனை மிளிர்வன காணாய்.
|
56 |
|
|
|
|
ஞான
நாயகன் றிருவடிக் கன்புசெய் நண்ப
மானும் வேங்கையு மொருதுறை நீருண்டு மகிழ்வ
தேனி றாலிழி மதுவொடும் பழநறை தேக்கிக்
கான வேழமஞ் சிங்கமுங் களிப்பன காணாய்.
|
57 |
|
|
|
|
பிள்ளை
நீர்மையிற் குணநிலை பிறங்கிய பெரியோய்
கொள்ளை யாடுகோ ணாய்த்திரள் குலப்பகை யின்றித்
துள்ளு செம்மறித் திரளொடு தொடர்புகொண் டுலவிக்
கள்ளு லாமலர்ப் பொதும்பரிற் றுயில்வன காணாய்.
|
58 |
|
|
|
|
உச்சி
தற்கித யாசன நல்கிய வுரவோய்
செச்சை யாளரி யூனிரை தேர்கில தெருண்டு
கொச்சை யாட்டொடுங் கோக்குலத் திரளொடுங் குழுமிப்
பச்சை நாகிளம் புற்றழை கறிப்பன பாராய்.
|
59 |
|
|
|
|
மேம்ப
டும்பர சிற்சுகம் விழைந்திடு மேலோய்
தீம்ப யன்கடை வாயிழி யாயர்தஞ் சிறுவர்
தூம்பு றழ்ந்தபுற் றரவொடுந் தொகுகடு விரியன்
பாம்பொ டும்விளை யாட்டயர் பரிசினைப் பாராய்.
|
60 |
|
|
|
|
தொல்லை
யாரண துருவையா னிரைதுரூஉந் தொறுவர்
முல்லை யங்குழ விசைக்குறி முறைவழா தொழுகி
மல்ல லோங்குபுல் லாரவுண் டணிநிழன் மறிந்து
கல்ல ளைச்சுனை நீருண்டு வருவன காணாய்.
|
61 |
|
|
|
|
மன்னு
நித்திய ஜீவனை விழைந்தநன் மதியோய்
சென்னி வான்றொடு மாதவப் பள்ளியுஞ் செறிந்த
அந்ந லார்துற வாச்சிர மங்களு மறவோர்
பன்ன சாலையு முறைமுறை திகழுவ பாராய்.
|
62 |