பக்கம் எண் :

286

  உத்த மக்கலை ஞானமெய் யுணர்வுநல் லொழுக்கஞ்
சத்தி யந்தவஞ் சாந்தநற் றருமமே தயாளம்
நித்த மங்கள மாகிய குணங்களா னிமிர்ந்து
பத்தி யிற்றிகழ் மாடங்க ளளப்பில பாராய்.

71
   
  பன்னு வேதபா ராயண பரக்கநீ பார்க்கும்
மன்னு மானந்த மலைப்பிர தேசமற் றிதனைத்
துன்ன ரும்பரி சுத்தசேத் திரமெனுஞ் சுருதி
பொன்னி லத்திள வரசனே சதோதயம் புரப்பர்.
72
   
  காவ லன்றிருக் கருணையைக் கடைப்பிடித் துள்ள
ஜீவன் முத்தரே குடிகளங் கியல்வது செங்கோல்
பாவ தோடங்கள் யாதுமின் றாதலிற் பரம
ஜீவ நன்மையே கதிக்குமத் தேயத்துச் செய்யோய்.
73
   
  சுமையைப் போக்கிய தூயவ வானந்தந் துதைந்த
சிமையத் தேநின்று தென்றிசை நோக்கிடிற் சியோன்
இமையத் தாரெழின் முத்திமா நகரத்தை யெதிரில்
அமையக் காண்குவை கரதலா மலகமா யருகில்.
74
   
  என்று பத்தியா மாதவக் கிழத்திகண் ணெதிரில்
தென்றி சைப்படு காட்சியைத் தெள்ளிதிற் றெரிக்க
மன்றல் வேதியன் மலைநிலை மயலறத் தெருண்டு
நின்று பேரதி சயத்தொடு மற்றிவை நிகழ்த்தும்.
75
   
  கண்ட காட்சியிற் கதித்தவாச் சரியமுங் கருத்தை
உண்டெ ழுந்தபே ருவகையு முண்மையை வடித்து
விண்ட நின்னுரை விசேடமு மிவ்வென விதக்க
ஒண்டொ டீஇயெனக் குணர்ச்சிமட் டுரையுத வின்றால்.
76
   
  சக்க ராதிப னருட்புணை யாலன்றித் தமியேன்
துக்க சாகரத் தலறிய வெறிதிரைச் சுழியுட்
புக்கு நீந்தியிவ் வானந்தப் பொருப்பினைக் குறிக்கொண்
டக்க ரைத்துறை பிடித்திட லாவதோ வம்மா.
77
   
  வழிதெ ரிப்பதும் வழித்துணை யாவதுங் குறித்த
வழிந டத்தியா தரிப்பதும் வழியைவிட் டயலோர்
வழிபு காவகை மறிப்பது முடிவுமட் டாக
வழியின் மேவிடர் களைவதுந் திருவருண் மாட்சி.
78