|
துற்று
பேரிடர் யாவையு மொருங்கறத் துடைத்துக்
கொற்ற வன்கிரு பாஸ்தமே குறிக்கொண்டு காத்த
திற்றை நாள்வரை யின்னுமென் வழித்துணை யாகி
முற்றுங் காக்குமென் றொருப்படீஇ வழிக்கொள முயன்றான்.
|
79 |
|
|
|
|
உருகு
காதலி னருந்தவக் கிழத்திய ருவந்து
வருக வென்றுசென் றாயுத சாலையை மருவி
இருக ருக்குள பட்டய மாதிய வேதி
திருகு லாமறை வாணனுக் களித்தனர் தெரிந்து.
|
80 |
|
|
|
|
எள்ள
ருங்கும ரேசன்யாத் திரிகருக் கென்ன
உள்ளி யாக்கிய வப்பமு முசிதமுந் திரிகைத்
தெள்ளு தீங்கனி வற்றலுங் கைக்கொடு செல்க
கொள்ளு கையவென் றுதவின ரமைவனகொணர்ந்து.
|
81 |
|
|
|
|
மந்தி
ராயுத வருக்கமு மருந்தன வுணவும்
அந்த ணன்றனக் கின்றமை யாப்பொரு ளாகப்
புந்தி யாலுற மதித்துநன் றறிமொழி புகன்று
சிந்தை யாலுறப் புனைந்தனன் றிவ்யபோர்க் கோலம்.
|
82 |
|
|
|
|
மேவும்
யுத்தசன் னத்தனாய் விளங்கிய திறலோன்
பூவை யர்க்கெலா மஞ்சலி வரன்முறை புதுக்கி
ஆவி யிற்பிரி யாவிடை யாசியும் பெற்று
ஜீவ பாதையைக் கடைப்பிடித் தேகினன் செய்யோன்.
|
83 |
|
|
|
|
காவ
லாளனை வினவியக் கதிவழி நிதானி
போவ தாகிய செயலறிந் துளமகிழ் பூப்ப
ஆவ லாயுப சரித்துவந் தனமினி தாற்றிச்
சாவ தானநன் விடைகொடு போயினன் சதுரன்.
|
84 |
|
|
|
|
காத
லாய்நெடுந் தூரமெய்ப் பத்தியங் கனையே
ஆதி மாதருன் னாவியிற் பிரிகலம் யாமென்
றோதி மங்கள சாஸன விடையினை யுதவிப்
போது வாயென விடுத்தனர் தாயரே போல்வார்.
|
85 |
|
|
|
|
இந்த
மாதவக் கிழத்தியர் குணஞ்செய லெலாமென்
சிந்தை யுள்ளுறத் திகழ்ந்தன நனவுறு செயல்போல்
விந்தை யங்கனா வின்னமு நிகழ்வுழி விரும்பி
அந்த ணன்றனைத் தொடர்ந்தனன் மேல்விளை வறிவான்.
|
86 |
|
|
|
|
காட்சிப்
படலம் முற்றிற்று |
|
|
|
|
|
குமாரபருவம்
கவி, 714 |
|
|
|
|
|
முதல்
இரண்டு பருவங்கள் கவி,1830. |
|