|
கண்டு
கண்டு உவந்து - பார்த்துப் பார்த்து மகிழ்ந்து.
வித்தகத் ரோகைமாமயில் - ஞானமுள்ள சிறந்த
தோகையையுடைய மயில்கள். (சுதேச ஸ்திரீகள்.)
அகவுஞ் சூழல்வாய் - ஆனந்திக்கின்ற பொழில்கள்தோறும். நாகம் மாயுமே
- தந்திரமுள்ள பசாசாகிய சர்ப்பந் தலை
நீட்டாது ஒழிவான்.
நாகம் ஆயுமே - சுவர்க்கலோகவாசிகள்
(இந்தக்காட்சியைக்)
கூர்ந்து கவனிப்பார்கள். எ - று. |
|
|
|
|
23. |
சீதவாவியின்
- குளிர்ந்த தடாகங்களில்.
செய்ய பங்கயப்போது அலர்ந்திடும் போது -
செந்தாமரைப்
புஷ்பங்கள் விரிகின்ற பிராதகாலத்தில்.
ஆதபன் கதிர் அலருங்காலையில் - நீதியின் சூரியகிரணம்
விளங்குகின்ற (காலை யாராதனைக்குக் கூடுகின்ற.)
மாதர் வாண்ழக வாரிசங்களும் அலர்ந்திடும் -
ஸ்திரீகளின்
பக்தி விளங்குகின்ற வதனாம்புயங்களும்
விகசிதமாயலர்ந்து விளங்கும். எ - று. |
|
|
|
|
24.
|
இன்ன
லுற்றவர்க் கிரங்கி - துன்பத்தை நுகருகின்ற
வறியவருக்கு இரங்கி.
யாண்டுமெய் நன்னர் வாசக நவிற்றி - எப்பொழுதும்
உண்மையான மாதுரியவசனங்களைக் கூறி.
ஆதரித்து - ஆதரவுசெய்து.
உன்னருங்குணத் துதவிசெய்திடும் - நினைத்தற்கரிய
நற்குணத்தோடு உபகாரஞ் செய்கின்ற.
அந்நலாரெலாம் - அந்த நல்லவர்களெல்லாரும்.
அநலார்களே - அத்திருநாட்டில் வாசஞ்செய்யும்
உத்தமகுணப் பெண்டிர்கள்தான். எ - று. |
|
|
|
|
25. |
மாரிசம்
களை மா தவத்தரும் - கள்ளமில்லாத மனஸோடு
பக்தி செய்கின்ற திருத்தொண்டரும்.
நாரி சங்கமும் - மாதர் கூட்டமும்.
நண்ணி அங்கு இருபாரிசங்களும் - (ஜீவவூற்றண்டை)
அடுத்து
இருகரை மருங்கும்.
படியுங்கால் - படியும்போது.
முகவாரிசம் குலாம் - (அவர்கள்) முகபத்மங்கள்
விளங்கிய.
வாரிசங்கமே - ஜீவ நீர்நிலைகள் (அந்நாட்டில்)
சங்கமென்று
சொல்லத்தக்கனவாயிருக்கும். எ - று.
'படியுங்கால்' என்பதை நீர்நிலையில் நீராடுதலாகவும்,
தேவாலயத்தில் வணங்குதலாகவும் கொள்க.
|
|
|
|
|
26. |
திருமலிந்த
மங்கையர் சிறாரொடும் - வைதீகநலங் கதித்த
பெண்டிரோடும் பிள்ளைகளோடும்.
மைந்தர்தாம் - புருஷரானவர்கள்.
மருமலிந்த பூம்பொழிலின் - புஷ்பவாசனை பரிமளிக்கின்ற சோலையினிடத்து
(நற்கிரியை பரிமளிக்கின்ற
குக்கிராமங்களில் என்றபடி.) |
|