பக்கம் எண் :

292

  மேதகு மெய்மனத் தாழ்மை மேவிய
சாதுமார்க் கத்தவர் தடங்கு லாயது
பேதையர் பலபடப் பிதற்று நிந்தையாம்
வேதனை கூர்த்தமுள் விரவுங் கோட்பது.  
11
     
  மின்னெனப் புகையென வீயுந் தேகருக்
கென்னொரு பெருமையென் றெறியு நீரது
பன்னருந் தாழ்வுறு படுக ராயினும்
உன்னத பதவிபுக் கொடுங்கு மீட்டது.
12
   
  பலந்திக ழினையதோர் படுகர் வைப்பினை
வலந்திகழ் வேதிய னடைந்து வான்படர்
நலந்திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறைப்
புலந்திகழ் நெறிக்கொடு போயி னானரோ.
13
   
                 வனம்புகு படலம் முற்றிற்று.  
   
 
அழிம்பன் றோல்விப் படலம்  
 
 
     
  முற்படச் செலுநெறி முறையை நன்கறி
விற்பன நிதானியைச் சேரும் வேட்கையாற்
பற்பல யோசனை படுகர் வைப்பினிற்
பிற்பட விரைந்தனன் பின்றொ டர்ந்தரோ.
1
   
  ஆயிடைத் தமியனா யருள்வ ழிச்செலுந்
தூயவ னெஞ்சகந் துணுக்குற் றேங்கிடக்
காயுரு மிடித்தெனக் கதித்தொர் பேரொலி
ஏயெனு மாத்திரத் தெழுந்த தெஞ்சவே.
2
   
  பேரொலி முழக்கினாற் பேதுற் றுள்ளுடைந்
தாரிய னடிபிச காது நின்றிவண்
மாரியின் றாகவச் சுறுத்த வந்தவிக்
காரியம் யாதெனக் கருதுங் காலையில்.
3
   
  நஞ்சமு மவித்தையு மிருளு நாசமும்
வஞ்சமுங் கொடுமையு மறமுந் தீமையுஞ்
செஞ்செவே திரண்டுருத் தெரிய நின்றிடும்
அஞ்சனக் கருநிறத் தவுண யாக்கையன்.
4