பக்கம் எண் :

293

  பேயுமஞ் சுறுபெரும் பேய்மு கத்தினன்
காயெரி பங்கியன் கடுத்து றுங்கொடு
வாயினன் வக்கிர தந்தன் வன்கணன்
தீயெழு புகையென வுயிர்க்குந் தீயவன்.
5
   
 

உருக்கிய லுலம்பொரூஉ முரங்கொ டோளினன்
செருக்கொடுங் காத்தட மார்பன் றிண்ணியன்
வெருக்கொளத் தடித்தெழு மெய்யன் வெவ்விய
தருக்குறு மிருசிறை தழைத்த சார்பினன்

6
   
  .முடங்குளை யரியின்மும் மடங்கு மொய்ம்புளான்
கடங்கலுழ் கறையடிக் காலன் காழ்படும்
இடங்களிற் செதிளுறு மிருப்பு மேனியன்
விடங்கவி ழரவெனச் சீற்ற மிக்குளான்.
7
   
  பின்னிடு பார்ப்பனப் பிணங்க ளின்குறி
மன்னுவெண் டலைப்புழை மலிந்த மாலையன்
பன்னரு மவகுணப் படைக்க லத்தினான்
உன்னிய வுருவெடுத் துழலுங் கூற்றனான்.
8
   
  பாபத்தை மணந்தவன் பழியைப் பெற்றவன்
சாபத்தைப் படைத்தவன் றரும நாயகன்
கோபத்தை யடைந்தவன் குவல யத்தினுக்
காபத்தை விளைப்பவ னறத்தைத் தின்பவன்.
9
   
  உயக்கொளு நெறிவரு வோரை யொண்மதி
மயக்கிவன் சிறையிடைப் படுத்தும் வஞ்சகன்
வயக்குரு சுயர்த்தவிம் மானு வேல்பதம்
நயக்குநர் யாவர்க்கு நாச கண்டகன்.
10
   
  இப்படு பாதக னழிம்ப னென்பவன்
மெய்ப்படு கிறிஸ்தவன் விழிக்கு நேரெதிர்
கைப்படக் காண்டலுங் கலங்கி யுள்ளழிந்
தெப்படி யெனக்கினி யுய்வென் றெண்ணுவான்.
11
   
  முன்னெதி ரூன்றிட முரணின் றென்னயான்
பின்னிடு வேனெனிற் பிழைப்பின் றாலிவன்
வெந்நிடைச் சுடுசரந் துரந்து வீட்டுவன்
மன்னர்கோ னன்றியை மறந்த கேடுமாம்.
12