|
போர்த்தொழிற்
சேவகம் புரிவன் யானெனத்
தீர்த்தனுக் குடம்படி செய்திந் நாள்வரை
ஆர்த்தியிற் றருமுண வருந்தி வந்திவண்
பேர்த்தடி பிறழ்வது பெருந்து ரோகமால். |
13 |
|
|
|
|
எனைப்பகைத்
தானல னிவன்மற் றெம்பிரான்
தனைப்பகைத் தானெனச் சான்றுண் டாதலின்
முனைப்பகை முருக்கிட முரண்டந் தேழையேன்
வினைப்பகை தொலைப்பதும் வேந்தன் பாலதரல்.
|
14 |
|
|
|
|
அஞ்சியான்
பின்னிட லழகன் றாருயிர்
துன்சினு மரசற்குத் துரோகி யாகலன்
நெஞ்சுற வெதிர்த்துமுன் னிற்ப தேநலன்
என்சுறே னெனவுரத் தெதிரிட் டானரோ.
|
15 |
|
|
|
|
உங்கரித்
தமிம்பன்வந் துருத்து நோக்கிநின்
றெங்குளை யெங்குசெல் கிற்றி யாரை நீ
நுங்குமுன் புலப்பட நுவறி நொய்தென்றான்
கங்குலும் பகல்படக் கருகு நெஞ்சினான்.
|
16 |
|
|
|
|
விளக்கொளி
வரவிருள் விலகு மாறுபோல் இளக்கநெஞ் சேழைமை யபல மென்றின துளக்கற வருட்பலந்
துன்னி வேதியன் உளக்களிப் பொடுதுணிந் துரைத்தன் மேயினான்.
|
17 |
|
|
|
|
நாசதே
சத்துளே னாச தேசத்தில்
நீசவெவ் வினைகுடி நிலவிற் றாதலின்
மோசமு நாசமு முடுகு மென்றமெய்
வாசகங் கேட்டதை வரைந்து வீசினேன்.
|
18 |
|
|
|
|
வீவினை
விரும்பிடா விட்பு லத்துயர்
கோவினுக் கேயடித் தொழும்பு கூடினேன்
சாவினை விளைக்கவென் முதுகிற் றங்கிய
தீவினைச் சும்மையுந் தெறித்து வீழ்ந்ததால். |
19 |
|
|
|
|
நித்திய
மங்கள நிகழ்சு கானந்த
முத்திமா நகர்செல முடுகு கின்றனன்
எத்திற நுங்கருத் திராஜ பாதையின்
மத்தியில் யானுளன் மனக்கொ ணீயென்றான். |
20 |