பக்கம் எண் :

295

நன்றுநன் றுன்னிலை நாச தேசமுந்
துன்றிய குடிகளுஞ் சொந்த மாமெனக்
கென்றறி நீயுமென் றொழும்ப னின்றெனிற்
கொன்றுயிர் குடிப்பனீ துளத்துக் கோடியால்.
21
   
  கரைசெயற் கரியவென் காமி யச்சுவை
திரைசெய்தெண் கடற்புவிக் கருத்து தெய்வமும்
அரசனு மாமெனை யறிய கிற்கிலாய்
விரசுவ தென்னிவண் மீளு வாயென்றான்.
22
   
  கொல்வது முருத்துளங் கொதித்துப் பொங்கிமேல்
வெல்வது மிருக்கவோர் பக்கம் வேறு நீ
சொல்வது மெய்யெனைத் தொழும்பு கொண்டனை
செல்வதோ விளந்தையிற் றீட்டு சாசனம்.
23
   
  உள்ளநாண் முழுவதும் மொழிவின் றூழியங்
கொள்ளுவை நல்குபுன் கூலி கொண்டெவன்
பள்ளநீ ருலகினின் றுய்வன் பாவத்துக்
கெள்ளரு நித்திய மரண மேயுமால்.
24
   
  தீமையிற் றிருந்துமுன் றேச வாழ்க்கையின்
காமியச் சுவைநலங் காட்டு மேகொலாம்
வேமெரிக் கிடையிடை விறகிட் டென்னவே
மீமகீ பதிசினம் விளைப்ப தேயலால்.
25
   
  செப்பருந் தனிமுதல் திருவ டிக்கியான்
ஒப்படை யாய்த்தொழும் புஞற்ற நேர்ந்தனன்
எப்பெரு மிடரெனக் கிறுதி சூழினுந்
தப்புமார்க் கத்தடி சறுக்கி வீழ்கிலேன்.
26
   
  வீழினும் பிடித்தகை விடுக்கி லார்பகை
சூழினு முன்னின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து
வாழிய நலந்தரு வள்ள லாருக்கே
ஊழியஞ் செய்துய வொருப்பட் டேனென்றான்.
27
   
 

நிண்ணயம் வேதிய னிகழ்த்தக் கேட்டலுங்
கண்ணழல் கதுவிடக் கனன்று காரிருள்
வண்ணனு மெனையொரு மசகீ மாகவும்
எண்ணலை போலுநீ யெனவி யம்புவான்.

28