|
வாழுநன்
மதியுனக் கில்லை வாழ்வொடு
சூழுமிவ் வுடற்சுகந் துய்க்க நச்சிலை
ஊழிவெந் தீவிழுந் துடற்று மென்றசொற்
கேழைநீ யிடைந்திடர்க் கடற்குள் ளெய்தினாய்.
|
29
|
|
|
|
|
செய்தவ
றணுத்துணை சிமையத் தண்டனை
செய்திடு நலமெலாஞ் சிறிது மின்றெனச்
செய்தருள் வசத்தினால் ஜீவ ரக்ஷைவந்
தெய்துமென் றிசைப்பதே யீசு ராதிக்கம். |
30 |
|
|
|
|
உன்னத
புனிதமா மொண்ணெ ருப்பினைப்
புன்னர கீடங்கள் பொருந்த லாவதோ
முன்னமெத் தனையவர் முரணி முற்றும்விட்
டென்னர சியன்முறை யுவந்திங் கெய்தினார். |
31 |
|
|
|
|
மருண்டுமற்
கடப்பிடி வாத மாய்ச்சிலர்
தெருண்டில ரென்மொழி செகுக்கப் பட்டனர்
உருண்டநே மியினர சுய்க்கு மாண்டகை
இருண்டபுன் மனத்தரை யிரஷி யாததென். |
32 |
|
|
|
|
பொய்வழி
யுழன்றுநீ புரிந்த போகவிம்
மெய்வழி பிடித்தபின் னொதியில் வீழ்ந்தனை
உய்வழி பிறிதெனு முரைகொண் டேகினை
மைவழி வெருண்டுபின் வாங்க வெண்ணினை.
|
33 |
|
|
|
|
மற்றுநின்
புகழ்ச்சியை விரும்பி வந்தனை
இற்றைமட் டெண்ணினீ யியற்று தீமைகள்
முற்றறி கடவுளின் முறைமைக் கேற்பவோ
எற்றவா மிரக்ஷணை விழைத லேழைநீ. |
34 |
|
|
|
|
தஞ்சமென்
றெனையடைந் தவர்க்குச் சாவுமட்
டெஞ்சுறாத் துன்பம்வந் தியையு மாயினும்
வஞ்சனை யானும்பொய் வாய்மை யானுமிங்
குஞ்சிடப் பலவகை யுறுதி சூழ்வனால்.
|
35 |
|
|
|
|
ஈட்டிய
நன்றுதீ தெதையு நாடலேன்
கோட்டமி லென்னுரை குறித்து நின்றிடின்
வேட்டவர் வேட்டசிற் றின்பம் வேண்டுமட்
டூட்டலென் னரசியன் முறையென் றோர்தியால். |
36 |