பக்கம் எண் :

297

பொற்புறு நாசதே சத்துப் போந்துநீ
அற்புத வளநுகர்ந் தாயு ணாளெலாம்
முற்படு காமிய முழுதுந் துய்த்திரு
பிற்படு கதிநினைந் திரங்கிப் பேதுறேல்.
37
     
  இணங்குவா யெனிலிக சுகத்தை யீகுவல்
பிணங்குவா யெனிலுயிர் பிழிந்து தேக்குவல்
உணங்கியோ யெதுதுணி புரைத்தி யென்றனன்
நிணங்கெழு குருதிவே னிசாச ரேசனே.
38
     
  நஞ்சினிற் றீயினி னடுக்கங் காட்டிய
வஞ்சகப் பேய்மகன் பிதற்றும் வாய்மொழி
அஞ்செவி புகப்புக வகத்தி னுள்ளுற
விஞ்சிய தருட்பலம் வேதி யற்கரோ.
39
     
                 வேறு.  
  தைவிகவ நுக்கிரக சத்தியினு ரங்கொண்
டுய்வழியொ ழுக்கம்வில காதெதிரி லூன்றி
மைவருநி சாசரம னக்கொளிது வென்னா
மெய்வருத வச்சுருதி வித்தகன்வி ரிப்பான்.
40
     
 

சித்தமுற நன்கறிவ னீயெனது ஜென்ம
சத்துருவெ னக்குதவு சார்புரிமை வாழ்வென்
றத்தனையு நித்தியவ னர்த்தமெனு மாற்றால்
இத்தகைய நூனெறிபி டித்திவணி றுத்தேன்.

41
     
  மாயமுறு மின்பநலம் வாழ்வுசுக மாதி
ஆயவைத ரத்துணிதி யம்மவழ கிற்றால்
மேயமனை தோறுமெறி மிச்சில்விழை நாய்கொல்
சீயமுடி பெற்றரசு செய்யும்வகை செய்யும்.
42
     
  கொடுமதிப டைத்துலவு கோழைநர மல்லால்
நடுமதிப டைத்தவருன் னச்சுமதி கொள்ளார்
அடுமதிப டைத்திழிய ழிம்பவழி வெய்துங்
கெடுமதிப டைத்தனைகெ டாப்பழிப டைத்தோய்.
43
     
  விள்ளரிய பாதகவி னைச்சுமைவி ழுத்த
வள்ளலருள் சிற்சுருதி வாய்மைமதி யொன்றே
கொள்ளுவல்பு றத்துமதி கொள்ளமன முள்ளேன்
தெள்ளமுது குத்துவிட முண்பதுகொல் சீர்மை.
44