|
மேதகைய
தொண்டரைவி ரோதிகள்செ குக்கும்
போதிறைகை விட்டனரெ னாப்புகறி பொங்குங்
காதலினி கத்திடர்க ளைந்துகதி யுய்க்கும்
மாதயையின் மாட்சியென வெண்ணுகிலை மாற்றோய். |
45 |
|
|
|
|
மார்க்கவயி
ராகருடல் வார்குருதி யென்றும்
பார்க்கணுல வாக்கரிப கர்ந்திடலின் மேலாஞ்
சீர்க்கதியின் மேயபர சிற்சுகம்வி ளங்கித்
தீர்க்கமுறு மென்பதும் கேசபதி சித்தம். |
46 |
|
|
|
|
பாவநர
ஜீவவதிர ணம்பரம ராஜன்
கோவவனல் பற்றியெரி யாவகைகு றித்தே
ஆவிவளி வீசியரு ளாழியின்ம டுக்கும்
ஜீவநதி யுய்க்கவினை தீர்ந்துகதி சேரும்.
|
47
|
|
|
|
|
கேட்டியுன
நாட்டிடைகெ ழீஇயபல வீனக்
கோட்டிமக வாயெனைவ ளர்த்தனள்கு யப்பால்
ஊட்டிநனி யாதலினு ஞற்றுபல தீமை ஏட்டினில
டங்குகில வெண்ணிமுடி யாவால். |
48 |
|
|
|
|
எண்ணரிய
தீவினையி யற்றியுள னேனும்
நண்ணியம னத்துயரு நாடுபெறு மூச்சுங்
கண்ணருவி நீர்சொரிக ருத்துநனி கண்டு
புண்ணியர்பொ ருத்தருள ளிக்கமகிழ் பூத்தேன். |
49 |
|
|
|
|
இம்மகிழ்வ
ளித்தெனையீ டேற்றுசரு வேசன்
செம்மலொரு நட்பிடைதி ரிக்கமுயல் கிற்றி
அம்மகெடு வாய்முடிவ தாங்கொலிஃ துன்னால்
மும்மையுல குக்கெனினு மொய்ம்பிலது காண்டி. |
50 |
|
|
|
|
மற்றினியு
ரைப்பதெவன் வந்தவழி யின்னே
பற்றுதிய ணுத்துணைப யன்படுத லில்லாச்
செற்றமொடெ திர்ந்தமர்செ யத்துணிதி யாயின்
வெற்றிபெறு வாயலைவி ரைந்திடுதி யென்றான். |
51 |
|
|
|
|
செய்யமறை
யோனுரைசெ விப்படவ ழிம்பன்
நெய்யுறும ழற்சிகையெ னாச்சினநி மிர்ந்து
கையொடுகை யெற்றியிரு கண்குருதி காட்ட
வெய்யவுரு மேறெனவெ டித்தநகை செய்தே. |
52 |