பக்கம் எண் :

300

  ஆத்துமவி சாரியும் ருட்கடவுள் வேந்தன்
மாத்தகைய சேவடிம னத்திடையி ருத்தித்
தீத்தொழில ரக்கனுயிர் சிந்தவதிர் தும்பைப்
பூத்தொடைபு னைந்தமர்பு ரிந்திடுவ தானான்.
61
     
  நன்மைபர ஞானமொளி நல்லறமி வற்றைத்
தின்மையறி யாமையிருள் தீமறம டர்த்து
வன்மைமிகு வெஞ்சமம லைத்திடுதல் போலாந்
தொன்மறைவ லானொடுப சாசமர்தொ டுத்தல்.
62
     
  ஆயிடைநி சாசரன றக்கொடுமை பூண்ட
மாயமுறு வெஞ்சிலைவ ளைத்துமற மல்குங்
காயெரிமு கத்தனக டுத்துறுநு னித்த
சாயகச தம்பலத ருக்கொடுவி டுத்தான்.
63
     
  மற்றிணித டம்புயம றைக்கிழவன் வல்லே
செற்றமொட ரக்கன்விடு தீப்பகழி தீந்து
முற்றுமவை யிற்றுகமு ரண்கொள்விசு வாசப்
பற்றெனுமி ரும்பரிசை யாற்பொடிப டுத்தான்.
64
     
  தாக்கியவ ழற்பகழி சாம்பருறல் கண்டே
மீக்கிளர்சி னத்தவுணன் வெய்யவசை யென்னுந்
தீக்கிளர்ச கத்திரசி லீமுகம்வி டுத்தான்
காக்குதிகொ லோவறிவ லென்றொருக ணத்தில்.
65
     
  அங்கவைவி சைத்தணுகி யாத்துமவி சாரன்
செங்கையுறு கேடகம றிந்திடைசி தைந்து
பங்கமுற லாயினப ழிப்பிலற வோர்பால்
வெங்கணவர் சூழ்வினைவி ளிந்தொழியு மாபோல்.
66
     
  நன்முறையொ ரீஇயகெடு தோஷிநனி பொங்கித்
தொன்முறைவ டிக்கணைக ணிப்பிலது ரப்பப்
பன்முறையு நுண்டுகள்ப டப்பரிசை கொண்டே
சொன்முறைய றிந்தவனெ திர்ந்தவைதொ லைத்தான்.
67
     
                  வேறு  
  விஞ்சவி டுத்த நஞ்சுகு வெங்கோல் விறலின்றி
எஞ்சுதல் கண்டே நெஞ்சழி வுற்றங் கிகல்வெய்யோன்
பஞ்சமு னிற்காய் செஞ்சிலை பற்றாய் பரிசைக்குள்
அஞ்சியொ ளிப்பாய் வெஞ்சம ருக்கீ தறமேயோ.
68

 

.