|
தொண்டன்
விற்றொடை யாக்கிய சுருதியாத் திரமிவ்
வண்ட கோளகை யடுக்கழிந் தொழியினு மவியா
தெண்டி சைப்புவி யகத்திரு ளரிதர விரவி
மண்டி லம்மெனப் பொலிந்தது வானுற வயங்கி. |
85 |
|
|
|
|
திவ்வி
யாத்திரந் தேசொடு செறுத்தெதிர் வரக்கண்
டவ்வி யச்சம யாசுகம் வாய்மத மடங்கி
எவ்வ யிற்கரந் துறைதுமென் றேங்கியுள் ளுடைந்து
கௌவை யுற்றது முகங்களுங் கவிழ்ந்தன கருகி.
|
86
|
|
|
|
|
புடைப
ரந்தமெய் யொளியினாற் புகலிடம் பெறாதங்
கிடையு மாசுரப் பகழியை யெறுழ்வலிக் கலுழன்
அடையும் வெவ்விட நாகத்தை யாருயிர் குடித்தாங்
குடைய வன்படை யொருங்குயிர் குடித்ததவ் வொல்லை. |
87 |
|
|
|
|
மித்தை
யாயதுன் முகப்படை விளிந்துநீ றாக
உத்த மாத்திரம் வேதியன றூணிபுக் கொடுங்கி
வித்த கச்சுடர் விரித்தினி தமர்ந்தமெய் வேத
சத்தி யத்தெதிர் நிற்குமோ புலைப்படு சமயம். |
88 |
|
|
|
|
அலகை
வீசிய வறுசம யச்சிலீ முகத்தை
இலகு திவ்வியாத் திரமென்ப ரியன்மதி யில்லார்
கலக மாயவை யொன்றையொன் றடர்ப்பது கண்டும்
உலக சிற்றின்ப போகத்தை யூட்டுவ துணர்ந்தும். |
89 |
|
|
|
|
காசு
ரம்பெறு காப்பியக் கவிஞர்கள் தீட்டும்
பரசு ரத்தெழுந் துலகிடைப் படுபுறச் சமய
ஆசு ரப்படை கோடிக ளடுப்பினு மவையெம்
ஈசு ரப்படை யாதித்தற் கெதிருமின் மினியாம். |
90 |
|
|
|
|
குத்தி
ரச்சம யாசுகந் தொலைந்தமை குறிக்கொண்
டெத்தி றம்மினி வாகைகொள் ளுவலென வெண்ணித்
தத்து வம்மசிப் பொருளெடுத் தகந்தையிற் சமைத்த
அத்து வைதமாம் படைதொடுத் தார்த்தன னழிம்பன். |
91 |
|
|
|
|
சொல்ல
ரும்பசும் பொன்னணிக் கிடையிடை துதைந்து
வில்லி டும்பல விதம்படு வெறுந்திருட் டாந்தக்
கல்ல ழுத்திய கலனிரை கவினுறப் புனைந்த
தல்லை யும்பக லாமருட் டுவதத்து வைதம். |
92 |