பக்கம் எண் :

304

  சித்த விர்த்தியைக் கெடுப்பது தீநெறி யொழுகப்
புத்தி யைமயக் கிடுவது புவனகோ சரத்தை
மித்தை மித்தையென் றேய்ப்பது மெய்யுணர் விலாரைச்
சுத்த சூனிய கதியிடைக் கவிழ்ப்பதத் துவைதம்.
93
     
 

இனைய தீப்படை யறவன்முன் செருக்கிவந் தெதிர
முனைவ னின்னருட் பலத்தினான் முனைமுகத் தூன்றி
வினைய மாகமெய் விதண்டவா தத்தொடை மிலைச்சிப்
புனையு மோர்வயி ராகதண் டங்கொடு புடைத்தான்.

94
     
  தண்ட வெள்ளிடி வீழ்தலுங் தலைமண்டை சிதறிக்
கொண்ட கொள்கையு மதவகங் காரமுங் குலைந்து
கண்ட கன்படை கரந்தது கானகந் துருவி
மண்டெ ரிக்குமுன் றருக்குமோ வறியபுன் பதரே.
95
     
  நாத்தி கப்படை தொடுத்தனன் நராந்தக னலங்கொள்
ஆத்தி கப்படை தொடுத்துட னழித்தன னறவோன்
தீத்தி ரட்படு செங்கணான் பிடித்தவெஞ் சிலையிற்
கோத்த வத்திரம் யாவையும் வேதியன் குறைத்தான்.
96
     
  சால மார்தரு படைக்கலத் தொகுதிகள் சாம்பிப்
போலி யாயின யாதினிப் புரிகுவ லெனவிற்
கோலி வெஞ்சினக் கொடுந்தழற் பகழிகோத் தெய்தான்
நீலமே கஞ்செந் தழன்மழை பொழிந்தென நிருதன்.
97
     
  செக்கர் வானெனத் தீக்கணை வயின்றொறுஞ் செருமிப்
பக்க மெங்கணுந் தீந்துகப் படர்தலும் பனவன்
அக்க ரத்திரு மந்திரப் படைதொடுத் தவித்துந்
தொக்கு மேனியிற் சிற்சில சுடுகணை துதைந்த.
98
     
  கொள்ளி யாரழற் சுடுகணை யாக்கையிற் குளிப்ப
ஒள்ளி யோன்சிறி தலமர லுற்றமை யோர்ந்து
துள்ளி யோடிவந் தெதிருறீஇ மல்லமர் தொடுத்துத்
தள்ளி வீழ்த்தின னிலனுற வழிம்பனாஞ் சழக்கன்.
99
     
  ஆரி யன்றளர்ந் தவனியிற் படிந்துமூச் சயர்ந்து
போரி யன்றில னாகவின் னேதலை புரட்டி
வீரி யம்பெறு வேன்வெற்றி யெனதென விளித்துப்
பூரி யன்கெடு புணர்ப்பினா லருகுறக் போந்தான்.
100