|
மாதரை
யுலகைப் பொன்னை மதித்தற நெறிகை விட்ட
பாதகந் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கிப்
பூதலம் வெடித்த வாயிற் பொதுளிய நிரையச் செந்தீ
மீதெழுஞ் சுவாலை தாக்க வெந்துளங் கருகு வாரை. |
23 |
|
|
|
|
சாற்றுநன்
மதியைத் தள்ளித் தன்மனம் போன போக்கில்
வீற்றுவீற் றாகிச் சென்று விளைத்ததீ வினையைச் சுட்டிக்
கூற்றம்வந் துடற்றி நெஞ்சிற் கொடுந்தழ லிறைப்ப வாதை
ஆற்றரி தாகி யாவிவ யழுகிநின் றலறு வாரை. |
24 |
|
|
|
|
மெய்வழி
தெரிந்தார் போல விழுத்தவ வேடம் பூண்டு
பொய்வழி யலைந்து தீமை புரிந்தபே தமைவந் தூன்றச்
செய்வழி வகைகிட் டாது தெருமர லுழந்து தேம்பி
உய்வழி யினியின் றென்னா வுயிர்ப்பெறிந் துயங்கு வாரை. |
25 |
|
|
|
|
விக்கிர
கத்துக் கந்தோ மெய்த்தெய்வ வழிபா டாற்றும்
அக்கிர மத்தையுள்ளி யாருயிர் பதைப்பத் தேவ
உக்கிர கோபத் தீயி னொள்ளழற் கிடங்கர் வீழ்ந்து
கொக்கரித் தலறி யேங்கிக் கூக்குர லெழுப்பு வாரை. |
26 |
|
|
|
|
இக்கொடு
மரணச் சூழ லெண்ணில ரெய்தக் கண்டும்
மக்களை மனையைப் பேணி வறும்பொரு ளீட்டி மாயச்
சிக்குளே சிக்கி வாளாச் சிதைத்தனம் வாணா ளென்னாத்
தொக்கபே ரிடர்க்குண் மூழ்கித் துடிதுடித் தயரு வாரை. |
27 |
|
|
|
|
உய்திற
நாடு வார்போ லுவப்புரை பேசி யொண்பூக்
கொய்திறம் போல மற்றோர் கொழுநிதி கவர நாளுஞ்
செய்தவஞ் சனைகளாய தீமுகத் தயில்வேல் தாக்கி
நொய்துளங் கிழிய மாழ்கி நொறுங்கிநொந் துலம்பு வாரை. |
28 |
|
|
|
|
ஆத்தும
சுகத்தைப் பேணா தனவர தமுநன் றூட்டிக்
காத்துடுத் தணிந்து பேணிக் கதித்தபா ழுடலை யந்தோ
தீத்தொழி லுருவு வாய்ந்து செறிந்தவன் கிருமிக் கூட்டம்
பாத்துண்டு களிப்ப மாழ்கிப் பதைபதைத் துழல்கின் றாரை. |
29 |
|
|
|
|
கண்ணொளி
மழுங்க லாகிக் காதடை பட்டுக் கைகால்
தண்ணெனக் குளிர்ந்து நாடி தளர்ந்துபுண் பட்டு நெஞ்சந்
துண்ணெனக் கலங்கி யாவி துடித்துமூச் சொடுங்கு காலை
பண்ணிய வினைக்கு நேர்ந்த பயனெனப் பதைக்கின்றாரை. |
30 |