|
இத்திற
மாவி சாரி யிருட்சிறைப் படுகர் துற்றிக்
கத்துகூக் குரலுந் துன்பக் காட்சியுங் கண்டு கேட்டுச்
சித்தசஞ் சலியனாகத் தெய்விக சகாயத் தாலே
முத்திநூ னெறியைப் பற்றி முறைபிச காது சென்றான். |
39 |
|
|
|
|
அங்கொரு
சிறையி னூடே யக்கினிக் கடன்மே லோங்கிப்
பொங்கிய தென்னச் சீறிப் புகைந்துகந் தகத்தீ மண்டி
எங்கணு நடுங்கி யேங்க வெரிகொடு மலபா தால
வெங்கொடு நகரங் காந்து விரித்தபேழ் வாயைக் கண்டான். |
40 |
|
|
|
|
கொந்தழல்
பருகி யோங்கு கொடும்புகை யாய கொண்மூ
அந்தரத் தெழுந்து மூடி யவிரொளி யார மின்னி
உந்திய விரைச்சன் மேய வுருமிடி யேறு தாக்கிக்
கந்தகப் புலிங்க மாய கனன்மழை பொழியக் கண்டான். |
41 |
|
|
|
|
கையுறு
விளக்கைப் போக்கிக் கடுங்குழி கவிழ்வார் போல
மெய்யுறத் திகழ்த்தும் வேத விற்பன நெறிகை விட்டு
மையிருள் படர்ந்து தொக்க மாரணப் படுகர் வீழ்வுற்
றையகோ வைய கோவென் றலறுபே ரொலியுங் கேட்டான். |
42 |
|
|
|
|
கண்டுகேட்
டுளமுங் கண்ணுங் கருகின துணுக்குற் றேங்கிக்
கொண்டபே ரச்சத் தாவி குலைந்தறி வழிந்தி யாக்கை
தண்டென விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்ற
துண்டுகொ லுயிர்மற் றென்னாத் திகைத்தன னுணங்கி யானும். |
43 |
|
|
|
|
ஆயிடை
யருகர்க் கிட்டி யழிபடு நரகக் கோட்டை
வாயின்மேற் கொள்ளா தென்ற மகாதிரு மந்தி ரத்தைச்
சேயவன் காதி லூதித் தெருட்டிய செஞ்சொற் கேட்டேன்
தூயச ரீரி தானோ பிறிதொன்றோ சொலத்தேர் கில்லேன். |
44 |
|
|
|
|
மருண்டறி
வழிந்து நின்ற மறைவலா னுணர்வு தோன்றித்
தெருண்டன னாகி யொல்லை திவ்விய செயலைப் போற்றி
வெருண்டபோ துரந்தந்துய்க்கும் விறல்கொள்கே டகத்தைப்பற்றி
இருண்டகா னகத்து முன்னிட் டேகினான் சிறிது தூரம். |
45 |
|
|
|
|
அமையச்சே
தீபந் தூண்டி யலர்த்துவார் போலோர் வாக்குக்
கமையுற்ற தொண்டர்க் காவி காட்டிய தகைமை யோரின்
இமயத்தை நிகர்த்த துன்ப மிடுக்கண்வந் துறினு மேற்ற
சமயத்தே யுதவு மன்றோ தற்பரன் கிருபை யென்றும். |
46 |