|
சுருங்குநூல்
வழியைப் பற்றித் தூயவன் முன்செல் காலை
மருங்கெலாங் கண்ணி மாய வலைசுழல் பொறிகண் மல்கிப்
பெருங்கிடங் குளைசெங் குத்துப் பிறங்கலென் றினைய தொக்கு
நெருங்குபல் விலங்கு கிட்டி நின்றுநின் றுழல்வ கண்டான். |
71 |
|
|
|
|
புகலரு
நாச மோசம் பொருளிவீற் றிருக்கு மிந்த
இகலுறு மரண வைப்பி லிரவுபட் டுழலா வண்ணம்
பகலொளி திகழ்த்திக் காத்த பரமகா ருணிய முள்ளிக்
ககனநா யகனைப் போற்றிப் படுகரின் கடைவந் துற்றான். |
72 |
|
|
|
|
மிருத்துவி
னந்தத் துள்ள வியனிரும் பிலத்துண் மேயோர்
திருத்தகு ஜீவ பாதை சிதைத்திட முயலுந் தீயர்
வருத்திவே தியரைக் கொன்றூன் சுவைபெறு மறவோர் தம்மிற்
கருத்தழிந் துழலி ரண்டு கள்ளவல் லரக்க ருண்டால். |
73 |
|
|
|
|
இங்கிவ
ரிருவ ரும்பண் டெண்ணில்யாத் திரிக ராவி
நுங்கியோ ருகுத்த சோரி நொதிப்படு கிடங்குந் தூய
அங்கம்வெந் துக்க சாம்பற் குவைகளு மகில லோகம்
எங்கணுந் தெரியச் சாக்ஷி யியம்புவ தின்று காறும். |
74 |
|
|
|
|
பாவிய
ரிருவர் தம்மிற் பகற்குரு டாய தீயன்
ஜீவனுக் கிறுதி காட்டுஞ் சிலேட்டுமந் தொடங்கி நைவன்
கோவிய லழித்த மற்றோர் கொடியவ னாற்றல் குன்றிச்
சாவடிப் பட்டி யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க. |
75 |
|
|
|
|
அடங்கின
ரனர்த்தஞ் செய்யு மரக்கரோ ரிருவ ரேனும்
மடங்கலே றனையான் கிட்ட வயோதிக வைரி யாய
படங்கிள ரரவு சீறிப் பணிக்கரும் பழிச்சொல் லென்னும்
விடங்கலுழ்ந் திடவெண் ணாது வேதிய னெறியிற் போனான். |
76 |
|
|
|
|
மல்லல்கூர்
பரம சீயோன் மலைக்கதி பதியாந் தெய்வ
நல்லருட் டுணைமையாலே நவிலரு மரணச் சூழல்
எல்லையைக் கடந்தோர் கானத் திறுத்தன னாச தேச
அல்லலைக் கடந்து வந்த வாரணக் கிழவ னம்மா.
|
77 |
|
|
|
|
அலைபுரண்
டனைய துன்ப மடரினு மழலைக் காலும்
மலையென மரணங் கிட்டி மலையினு மருட்பே றாக
நிலையுறு மனத்திட் பந்தா னெஞ்சுறத் திகழு மாயிற்
கலைமதிக் கதிர்முன் னுற்ற விருளெனக் கழிதல் கண்டாம். |
78
|