|
வன்புறு
மரண வைப்பை யகன்றபின் மறைவ லாளன்
முன்புசென் னிதான னட்பை முயலுவா னாட்டம் வைத்தான்
மன்பதை யுலகி லாவி வதைபடு வறுமை யாதி
துன்புறழ்ந் தவர்க்கே யன்றோ தோன்றுநன் னிதான புத்தி. |
79 |
|
|
|
|
மரணச்
சூழலிறுத்த படலம் முற்றிற்று.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மெய்யா
ரணவித் தகன்வெவ் விடர்சால்
மையார் மரணா டவிவைப் பையொரீஇ
மொய்யா ரளியின் னிசைமுற் றியவோர்
உய்யா னவனாந் தரமுற் றனனால். |
1 |
|
|
|
|
வானா
டிவரும் பிரயா ணிகடாங்
கானா டியமெய் வழிகண் டறியக்
கோனா டியமைத் தசெய்குன் றிவரா
நூனா டியவே தியனோக் கினன்முன். |
2 |
|
|
|
|
நேரா
றுபிடித் துநிதா னியெனும்
பேரா ளனெறிப் படுபெற் றிதனைக்
கூரார் விழிகொண் டுகுணித் தணுகிச்
சீரா ளனடுத் திதுசெப் புவனால். |
3 |
|
|
|
|
அருமைத்
துணையே யிவ்வரோ கவனத்
தொருமித் துவழித் துணையுற் றியையத்
தருமக் கிருபா கரர்தந் தவருட்
பெருமைப் பிரசா தநலம் பெரிதே. |
4 |
|
|
|
|
நம்மா
வியுமாக் கையுநம் பொருளும்
அம்மா னடிக்கர்ப் பணமாக் கிடினுங்
கைம்மா றுகவா துகசிந் தவருட்
கிம்மா றணுவே னுமொரீ டுகொலாம். |
5 |
|
|
|
|
என்றின்
னனவோ கையொடீ சனருள்
நன்றுன் னிவழுத் தலுநன் றிதெனா
நின்றுன் னிநிதா னனுநெஞ் சமகிழ்ந்
தின்றுன் றுணைவாய்த் ததெனக் கெளிதோ. |
6
|