|
என்றே
வழிநா டினனென் குடிவிட்
டன்றே விழைவுற் றுனருந் துணையை
இன்றே வரைநா டினனெய் துகிலேன்
நன்றே யிவணேர்ந் ததுநா னுனையே. |
7 |
|
|
|
|
அருளே
யெனையிவ் வழியாக் கியெனக்
கருளே யுனருந் துணையாக் கியதால்
அருளே துணைமுற் றுநம்மா ருயிருக்
கருளே யலதொன் றிலையா தரவே. |
8 |
|
|
|
|
புத்திக்
கொருபோ தகதந் தையிறை
பத்திக் கொருபா லனைர க்ஷணிய
சித்திக் கொருநற் குருதே சிகன்வான்
முத்திக் குவழித் துணைமுற் றிலுநீ. |
9 |
|
|
|
|
என்னா
வுனைநட் டனனெம் பெருமான்
பொன்னார் கழனீ ழல்பொருந் தும்வரை
முன்னா டுதுமா ரணமுந் துகெனாச்
சொன்னான் விநயத் தொடுசூழ்ச் சியனே. |
10 |
|
|
|
|
வல்லார்
திருவுள் ளமகிழ்ந் தபடி
எல்லா நலமா குகவில் லொருவி
நல்லா யிவ்வழிப் படுநாண் முதலாச்
சொல்லாய் வரலா றுதொடுத் தெனவே. |
11 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
உளமலி
யுவகையி னொருங்கு கேளென
வளமலி யாரணக் கிழவ வானுலைக்
களமலி கனன்மழை கவிழ்ப்பக் காசினித்
தளமலி சராசரஞ் சாம்ப ராமெனா. |
12 |
|
|
|
|
நாசதே
சத்தவ ரெவரு நாடொறும்
பேசின ராயினும் பிழைப்பை நாடிலர்
மோசநா சத்திலே முழுகி டாவகை
ஈசனா ரருளெனை யிழுத்த திவ்வழி. |
13 |
|
|
|
|
விதிவழிப்
பட்டனன் விசால வெள்ளிடை
நொதிவழி யுறாவகை நுனித்து வந்தியான்
கதிவழிக் கடைத்தலை யடுக்குங் காலையிற்
சதிவழி புகுத்துமோர் தையல் தோன்றினாள். |
14 |