பக்கம் எண் :

318

  முச்சக மருண்மதி முகத்தள் மோகன
நச்சுவேற் கருங்கணி நறைவ டித்தென
இச்சக மொழியினி திசைக்கு மேந்திழை
அச்சநுண் மருங்குலா ளலகைக் கோர்துணை.
15
     
  கேடெலா மொருவழித் திரண்டு கேழ்கிளர்
பீடுசா லுருவமைந் துழலும் பெய்வளை
நாடியுண் ணினைப்பினுங் கொல்லு நஞ்சமிக்
காடவ ருயிர்ச்சுவை யறிந்த கூற்றரோ.
16
     
  நாமமோ காதுரி யெனந விற்றுமக்
காமினி மயற்படு கண்ணி குத்திவந்
தேமநூ னெறியிகந் தெனது மஞ்சமுன்
சேமவைப் பாக்கொளிற் செல்வர் நின்னில்யார்.
17
     
  புவிபடு சிற்றின்ப போக போக்கியங்
குவிபடு மாளிகை குலவிவ யென்னொடுந்
துவிபடா திளநலந் துய்த்தி யாலுயிர்
அவிபடு காறுமென் றடுத்துக் கூறினாள்.
18
     
  காதகி பகட்டிய கபட்டு நச்சுரை
ஈதிதென் றெடுத்தியா னிசைப்ப தும்மதைக்
கேதமில் குணத்தநீ கேட்ப தும்மதி
பாதகம் மனக்கறைப் படுக்கு மென்பரால்.
19
     
  மாந்தளிர் மேனியை மருட்டு நோக்கினைத்
தேந்தள வரும்பினிற் றிகழ்புன் மூரலை
ஏந்திழை யிச்சக மொழியை யென்மனம்
நீந்தவோர் நெடும்புணை நிகழ்ந்த தவ்வுழி.
20
     
  பணிவிடத் திளநலம் பகரும் பைந்தொடிக்
கணிகையர் காலடி கவிழ்க்குங் காமவெம்
பிணிகெழு மாந்தரைப் பிலத்தென் றோங்கிய
அணிகிளர் திருமொழி யதுமற் றென்பவே.
21
     
  நல்லுரை கடைப்பிடித் தைய நங்கைபாற்
செல்லிரு விழிகளைத் திருகித் தீங்குரை
புல்லிடா திருசெவி பொத்திப் பொள்ளென
வல்லிதின் விரைந்தனன் வலைக்குத் தப்பியே.
22