|
சிற்றின்ப
கருமமே யன்றிச் செய்வினை
மற்றிலை யென்பது மனக்கொண் மாதவம்
முற்றிநீ மறுமையின் முத்தி மாநலம்
பெற்றிட வெத்தனை யூழி பேருமோ. |
31
|
|
|
|
|
பூதல
மனைத்துமோர் புணர்ப்பி னாற்றருஞ்
சூதுமா நகரிடைத் துன்னி யான்பெறு
மாதரை மணந்திறு மட்டும் வாழ்கெனக்
காதலித் தென்னுளங் கரையப் பேசினான். |
32 |
|
|
|
|
தெருண்டமே
லவனெனத் திருகி யென்மனம்
மருண்டதங் கவனய வசனத் தாயினும்
இருண்டமூஞ் சியின்மறை யெழுத்துக் கண்டுடன்
வெருண்டகந் தெருண்டது வெறுப்புக் காட்டியே. |
33 |
|
|
|
|
ஐயகேள்
பழையமா னுடனை யங்கவன்
மையுறு கிரியையை வரைந்து நீங்கெனுஞ்
செய்யவா சகமது தெரியக் காண்டலுஞ்
சையென விகழ்ந்தனன் றகுவ தன்றெனா. |
34 |
|
|
|
|
இச்சகம்
பேசியா ளாக்கி யென்னையக்
கொச்சைவன் சிறைப்படுத் துயிரைக் கொள்ளுவன்
நிச்சய மெனவொரு நினைவு தோன்றலாற்
குச்சிதன் முகங்குறிக் கொண்டு நோக்கியே. |
35 |
|
|
|
|
நின்னையுங்
கெடுத்துநீ ணிலத்தை யுங்கெடுத்
தென்னையுங் கெடுத்தனை யெனினு மேழையேன்
தன்னையாட் கொண்டது தம்பி ரானருள்
முன்னைய னல்லனென் றுணர்தி முந்தநீ. |
36 |
|
|
|
|
ஓசைநீ
ருலகர சுரிமை நல்கினும்
ஆசைமா தரைமண மாற்று கிற்கிலேன்
நாசநின் மனைக்கடை நச்சுவார் கொலாம்
ஈசனோர் கடைத்தலை யெய்து மெம்மனோர். |
37 |
|
|
|
|
வருகிலேன்
முதியநின் வழிக்கொள் வாயெனக்
கருகிய சிந்தையான் கனன்றுன் னாருயிர்
பருகவோர் மறவனை விடுப்பல் பாரெனத்
திருகினா னுடலையென் னுயிர்தி யங்கவே. |
38
|