|
ஈதுவல
மீதிடமெ னக்கையறி யாத
பேதையர்பு கழ்ந்துதுதி பேசிடினு மென்கொல்
ஊதியமி கழ்ந்திடினு முண்டுபடு மேயோ
சேதமிலை யூரவம திப்பிலொரு சிந்தை.
|
63 |
|
|
|
|
கோட்டமுறு
தாழ்மையுயர் மேன்மைநிலை கூட்டுங்
கேட்டிடைவி ழுத்துநனி கேதமுறு சிந்தை
மேட்டிமையி தோர்ந்துமறை வேதியர்செல் தாழ்மைப்
பாட்டையைவி ழைந்தனனிம் மேட்டுநெறி பாரேன். |
64 |
|
|
|
|
என்றறுதி
கூறியய லேகெனவி டுத்துத்
துன்றியவு பாதிதொகு சூழலையொ ரீஇப்பின்
வென்றிதரு தாழ்மைநில மேவிவில காமே
மன்றனக ராதிபனை வாழ்த்திவழி வந்தேன். |
65
|
|
|
|
|
மட்கிமதி
குன்றறிம டக்குடிநி லாவும்
வெட்கமெதிர் வந்தெனைவி டாப்பிடிபி டித்தே
கட்கமென நெஞ்சுருவு கைப்புரைதொ டுத்தான்
உட்கிமறு குற்றதொரு கன்னலென துள்ளம். |
66 |
|
|
|
|
செத்தபின்வ
ரும்பரம சிற்சுகமெ னக்கண்
டுய்த்துணர்கி லாதுமன முட்கியுழல் தேவ
பத்திநடை யென்பதுப யித்தியம லாலோர்
சத்துமிலை யென்பதெமர் சாசுவத கொள்கை. |
67 |
|
|
|
|
மாசறுகு
லத்தமரை வாழ்வைமதி யாமே
நீசரொடு தாழ்படுகர் நேர்ந்துநடை கொள்ளல்
மோசமறி யாதமுழு மூடமதி யன்றிச்
சீசியடி மைத்தனமி தென்கொலிழி ஜென்மம். |
68 |
|
|
|
|
நாணலைகு
லப்பழியை நச்சுறவின் மானம்
பேணலைந கைத்துலகு பேசுபடு நிந்தை
காணலைக ழித்தெறிதி காமியந லத்தைப்
பூணலைபு விப்படுபு கழ்ச்சிசிறி தேனும்.
|
69 |
|
|
|
|
மேதினியி
லேபிரபு டீகரதி வீரர்
மாதகைய ஞானியர்வ ரம்பிலரி மார்க்கம்
மேதகைய தன்றெனவெ றுத்தனர்நி னைப்போற்
பேதையர லாலெவர்பி டித்திழிவு பெற்றார். |
70 |