பக்கம் எண் :

325

  கேவலரோ டாலயம ரீஇத்துதிகி ளந்தும்
ஆவலின்வ ணங்கியும ருட்குரவர் போதம்
மேவியுமு ணர்ந்திருவி ழிப்புனல்சொ ரிந்தும்
பாவனைசெய் நாணிலியி தெத்தனைப ழிப்பாம்.
71
     
  செய்பிழைபொ றுக்கெனவி ரக்குதல்தி ருட்டிற்
கைவருபொ ருட்குரியர் கையுறவ ழங்கல்
பொய்வழிய ரும்பொருள்பு றத்தெறித லென்றும்
மெய்வழிமி டிப்படலி தெத்தனைகொல் வெட்கம்.
72
     
  கானமுழ லுங்கவரி மாவுயிர்க ழிந்தே
ஈனமுறு மோர்மயிரி டர்ப்படுவ தேனும்
ஊனுடல்வ ளர்த்துயிர்சு மந்துலகு லாவி
மானமழி யப்பெறுமோர் வாழ்வுமுள தேயோ.
73
     
  தலையினிழி வுற்றமயி ரேயனையர் தத்தம்
நிலையினிழி வுற்றகடை யென்றறநி கழ்த்துங்
கலையைமுச லாக்ரமதி காட்டினைதி கழ்த்திப்
புலையரொடு கூட்டுணவி யைந்தபொழு தத்தே.
74
     
  இத்தகைய வெட்கமுமி கழ்ச்சியுமி ழுக்குஞ்
செத்தனைய துன்பமுமு ழக்கவரு தேவ
பத்தியைவெ றுத்துலக கேளிர்நடை பற்றிச்
சித்தமகிழ் கென்றுபல செப்பினனெ டுத்தே.
75
     
                   வேறு.  
     
  இன்ன வாறிகலி வெட்கமெனு மீன னெதிரில்
துன்னி நின்றெனித யஞ்சுடவு ரைத்த சுடுசொன்
மன்னு ஜீவவச னத்தினொடு மாறு கொளவும்
என்னு ளேநனியு னைந்தினைய வெண்ணி னனரோ.
76
     
  உலகர் மேன்மையென வுன்னுவதை யுன்ன தநிலத்
தலகி லாதிபர கத்தருவ ருப்ப ரறநூல்
விலகி மற்றிவன்வி திப்பதுமெய் வேத விதியன்
றலகை துன்மதிய ளாயநர மேதை யசடால்.
77
     
  மன்றி ரக்ஷணைவ ழங்கவரு மாம றைகொடே
நன்ற ருட்குமா நாயகன டுப்பு ரிவரீ
தன்றி யிவ்வுலக கந்தையறி யாமை செருமிப்
பொன்று புன்னரர்கொ லன்றெமைந டுப்பு ரிவதே.
78