பக்கம் எண் :

328

மருளுறு கங்குற் போது மாரணச் சூழ னீந்த
அருளொளி திகழ்த்தி யென்னை யாதரித் ததுமற் றுன்னைத்
தெருளொளி திகழ்த்திக் காத்த செவ்வியுந் துவிதமாய
பொருளெலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத் தாட்சி.
95
   
கோல்வழி யிழுக்கா வேந்தன் குவலயா டவியி லெம்மை
நூல்வழி நடத்திக் காத்த நுவலருங் கருணை நம்பி
மால்வழி விழாது வல்லே மானத தியானத் தோடு
மேல்வழி பிடித்து மென்னா விருவரும் விரைந்து சென்றார்.
96
   
                       நிதானிநட்பு படலம் முற்றிற்று.  
   
அலப்பனை வரைந்த படலம்
 
 
   
உலப்பிலா வாதி மூலத் தொருபரஞ் சுடரை நாடிப்
புலப்பகை களைந்த வேத புங்கவர் குழாத்த னேனும்
நிலப்பொறை யாகி நுண்ணூ னிண்ணயங் கருத்து ளூன்றா
அலப்பனென் றொருபேர் பெற்ற வசடனங் கவர்முன் சென்றான்.
1
   
சேய்மையின் விளங்கக் கண்ட தேகந்தான் கிட்டக் கிட்டத்
தேய்மதி போலக் குன்றிக் தேசழிந் துருவேறாக
நோய்மைமிக் குடையான் கொல்லோ விவனென நுனித்துநோக்கி
ஆய்மதி நிதானி யொல்லை யலப்பனை யுசாவித் தேர்வான்.
2
   
பூருவ தேசம் யாது பொருவரு நாச தேசம்
ஊரெது சள்வாய்க் கோட்ட முறுவதெங் கும்பர் நாட்டுக்
சாருளை குமரே சன்பா லாவலென் னிரக்ஷை வேண்டி
நேருமோ வொன்றித் தேக நேருமென் றுரைப்ப தானான்.
3
   
இத்தகு துணையெ னக்கிங் கிசைந்ததெத் தனைம கிழ்ச்சி
உத்தம வழிதோன் றாமே யுவந்துசெல் வதற்கு பாயம்
பத்திமார்க் கத்த ராய பவித்திர ரோடு செய்யும்
மித்திரங் கலந்த சம்பா ஷணையினின் வேறொன் றுண்டோ.
4
   

முன்முக மறியே னுன்னை யாயினு முனிவொன் றிகதுரைத்து
நின்முகங் கண்டும் நேரே வினவிய நேர்மை யோன் மடங்காத்
என்முகங் களித்த காட்சி யெதிர்ந்தனை பளிக்கோடு திகைத்
தனைநீ நன்முகங் காட்டு நெஞ்சத் தன்மையை யென்பனிவன்.

5