பக்கம் எண் :

331

  தன்னையிவ னறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா
நன்னரறி குவன்வாழ்க்கை நாசதே சத்தொருசார்
என்னயலூர்க் குடிதந்தை வாசால னிவனலப்பன்
இன்னிசைவாய் மொழிமதுர மிதயமெட்டிக் கனியாமால்.

22
     
  உருக்கவினிச் சேய்மையினி னுவப்பளிக்கு மண்மையுற
அருக்களிப்பைத் தருஞ்சிலசித் திரப்படங்க ளவைபோலும்
உருக்கிமன முவப்பிக்கு முரையாதி புறக்காட்சி
அருக்களிப்பைத் தருமிவன் றன் னகக்காட்சி
                                  யடுப்போர்க்கே.
23
     
  பரிகசிப்பென் றுளங்கோடல் பரமார்த்தம் பழிப்பின்றால்
தெரிகுவரென் சிந்தையைநந் தேவர்பிரான் முறைதவறி
தரியலரா யினுங்குற்றஞ் சாற்றமனந் துணியேன்யான்
பெரியபிழை யந்தியர்தம் பிழைகாணும் பிழையன்றோ.
24
     
  ஏதமறு திருத்தொண்டர்க் கிசையநடிப் பதுபோலச்
சூதுபொரு கழகமதுக் கடைசோரர் தொக்ககுழாந்
தீதகலா விலைமாதர் சேரியிவற் றவரவர்க்குப்
பேதமற நடித்திசையப் பேசுசமர்த் துளனிவன்காண்.
25
     
  மன்றாட்டு மனஸ்தாபம் விசுவாச மறுஜெனனம்
என்றாய வுபதேச வியலைவிரித் துரைப்பனவற்
றொன்றானுந் தனதிதயத் துணராக்கற் றறிமோழை
குன்றாத தீக்கருமி குணங்காணாக் கொடுந்தோஷி.
26
     
  பண்டைமறைத் திருவசனம் படித்துணர்ந்தும் பயனடையாச்
சண்டாள வறியஹிரு தயந்தனக்கு யானைத்தீ
உண்டுதிர்ந்த விளங்கனியு முருப்படுதற் குதவாமே
கொண்டகருப் பயனிழந்த குடம்பையுமே நிகிர்குணிக்கின்.
27
     
  விண்டியற்று மறைவினைகள் வெளிப்படுதற் கஞ்சுமிவன்
அண்டர்நா யகனெல்லா மறிகுவரென் றஞ்சுகிலான்
உண்டுசுகித் துறங்குதலுக் குளங்கவல்வான் பாவியெனக்
கண்டுணர்ந்தா வியிற்கலங்கிக் கவலுவா னலன்கண்டாய்.
28
     
  மாதகைய கிறிஸ்துவினூன் மார்க்கத்துக் கிடறுகட்டை
வேதபா ரகர்க்கெல்லாம் விலக்கரிய பெருநிந்தை
ஏதிலருக் கருவருப்பா மில்லவர்க்கு மனக்கசப்பு
பூதலத்துக் கொருபாரம் புலையனிவ னிலைதேரின்.
29