பக்கம் எண் :

332

  வஞ்சமொழிக் குகைவாயில் வதிந்திருக்கு மறைவசனம்
நெஞ்சகத்துத் தணவாமே நிலைத்திருக்கும் பைசாசஞ்
செஞ்செவே யவயவத்துச் செறிந்திருக்கும் பலதீமை
சஞ்சலநித் தியநாசந் தரித்திருக்கு மிவனடியில்.

30
     
  மித்திரரை யுறவினரை வேலைபுரி மாக்களைத்தன்
புத்திரரை மனையாளைப் புறத்தாரை யகத்தாரைச்
சித்திரமா மதிமருட்டித் தேசிகன்போற் றனைக்காட்டும்
எத்தனிவ னிசைபோய வெத்தரையு மெத்துவன்காண்.
31
     
  ஆக்கையும்ஜீ வனும்வெவ்வே றாயினுமொத் திருப்பதுபோல்
வாக்கொடுசெய் கருமங்கள் மாறுபடா திருத்தல்கடன்
வாக்கொடுசெய் கருமங்கள் மாறுபடு வறுமாற்றம்
ஆக்கைநிலை குலைந்துவிழுந் தழுகுமுடைப் பிணநாற்றம்.
32
     
  பாருலகப் புலையொழுக்கிற் படர்ந்தழுக்குப் படியாமே
நேருறுநன் னெறியொழுகித் தனைக்காக்கு நிலைசீயோன்
மேருநக ராதிபதி விருப்புறுமெய்த் தேவபத்தி
சீருறுநன் னடைகாண்டி மற்றதனிற் றிகழ்ஜீவன்.
33
     
  வித்தாகுந் திருவசன முளைகிளம்பி விசுவாச
உத்தமவே ரகத்தூன்றி யுள்ளன்பு கிளைத்தோங்கி
சுத்தநினை வெனுநறும்பூந் துணர்மலிந்துன் னதந்தோயும்
பத்தியெனுந் தருவினுக்கோர் நன்னடக்கை பயனாமால்.
34
     
  மின்பிறங்கு மழைமுகத்துக் குமரேசன் வியனுலக
மன்பதைக்கு நடுத்தீர்வை வகுக்குங்கால் விசுவாச
அன்புறழுங் கிரியைக்கே யருள்கிடைக்கும் வெறும்பேச்சுப்
புன்பதருக் கென்கிடைக்கு மெரிநிரையப் புழையல்லால்.
35
     
 

பத்தியெலாஞ் சொல்லளவிற் பரிணமிக்கு மன்றியிவன்
குத்திரமார் நெஞ்சகத்துங் குடியகத்தும் பாழ்படுமால்
எத்தனைய ரென்றுரைக்கேன் றவவேடம் பூண்டிவன்போற்
பித்துலக மயலளைந்து புறம்பொதியும் பேதையரை.

36
     
  அருள்வசத்தான் மனமொழிமெய் யான்மசுத்தி யடைந்தன்றிப்
பொருளுணரா வறுமொழியாற் புநருலகிற் பெறலரிய
மருளறுபே ரின்பநலம் வாய்க்காதென் றருள்மறையுந்
தெருளுறுநன் மனச்சான்றுந் தெரிக்கின்ற திறமோர்தி.
37