|
செய்யும்வினை
யொன்றாகச் செப்புமொழி பிறிதோன்றா
வையகத்து நடிக்கின்ற மறவோர்தங் கூட்டுறவு
பொய்யாய கனவிடத்தும் பொல்லாங்கு தருமென்றல்
மெய்யாய வறம்விளக்கும் வித்தகநூற் றுணிபென்றான்.
|
38 |
|
|
|
|
நுண்ணறிவு
பகுத்துணர்த்த னுவலுகின்ற சொற்சுவைமெய்
எண்ணநல மிழுக்காமே யலப்பனிய லெடுத்துரைத்த
பண்ணவனை மனதாரப் பழிச்சிநனி பரமார்த்த
நிண்ணயத்தைக் கடைப்பிடித்த நிதானிநிகழ்த் துவதானான்.
|
39 |
|
|
|
|
விரதமா
தவத்தோய்நின் விழுத்தகுசீர் மொழியாய
அரதநதீ பத்தாலிவ் வலப்பனகத் தியல்பெல்லாங்
கரதலா மலகமெனக் கண்டறிந்து கருத்துற்றேன்
சரதமுணர்த் தியவுனக்கோர் கைம்மாறு தரவுளதோ.
|
40 |
|
|
|
|
செப்புமொழித்
திறமன்றிச் செய்கைநலம் படையாத
தப்புளிமற் றிவன்றனக்குச் சாமியமா மிரைமீட்புக்
கப்படியென் றிரண்டன்றி யொன்றிருந்துங் கருதுங்கால்
துப்பிலவென் றிழிவுற்ற சூகரமுங் குறுமுயலும்.
|
41 |
|
|
|
|
அசப்பியவாக்
கியனென்ப தறியாமே வழித்துணைக்கு
வசப்படுவ னிவனென்னா மருண்டனனென் செவிவாயிற்
பசப்பியவீ ணலப்புமொழி பாரித்த மதுரமெலாங்
கசப்பாயிற் றெந்தாயுன் கட்டுரையின் வன்மையினால்.
|
42 |
|
|
|
|
ஏர்திருத்தி
யாழவுழு தெருப்பெய்தங் குவர்கழியப்
பார்திருத்திச் செழுஞ்சாலிப் பயிர்விளைப்பர் பணிமாக்கள்
ஓர்திருத்த மிலரையுமெய் யுணர்வெழுப்பி யுளம்புதுக்கிச்
சீர்திருத்தி யிரக்ஷணியப் பயிர்விளைப்பர் ஜீவன்முத்தர்.
|
43 |
|
|
|
|
அறங்காட்டு
மலப்புறுவா யகங்காட்டு மவயவங்கள்
மறங்காட்டு மனத்துணிவு மற்றிவற்கு நன்மையெலாம்
புறங்காட்டு மெனினுமியாம் பொதுநீதி யருள்ஞானத்
திறங்காட்டி யீடேறத் தெருட்டுதனங் கடனன்றோ.
|
44 |
|
|
|
|
என்றின்ன
நிதானியெடுத் தியம்புதலு மறைவாணன்
நன்றுனது கருத்துண்மை நவின்றாலு நலந்தோன்றல்
இன்றிவன்பான் மாசுணத்துக் கின்னமுத மளித்தாலுங்
கொன்றுயிரைக் கவரும்விடங் கொடுப்பததன் குணமாமால்.
|
45
|