பக்கம் எண் :

337

  புல்லொ ழுக்கமொ ருங்கறப் போக்கியே
நல்லொ ழுக்கந வின்றுநன் னூல்வழி
இல்லொ ழுக்கிக வாமலி ராப்பகல்
செல்லொ ழுக்கம்வி டாவகை செல்லுமால்.

70
   
  கோதி லுண்மைகு லாமுக்க ரணமெய்ப்
போத மல்குபு னிதசம் பாஷணை
சாது சங்கந்த லைப்படு கூட்டுற
வாதி காதலித் தாற்றிவ ழிபடும்.
71
   
  தனைவெ றுக்குந்த னைக்கெடுக் கின்றதீ
வினைவெ றுக்கும்வி சுவசித் தன்பொடு
முனைவற் போற்றிமு றைப்படு செய்கையில்
நினைவிற் காட்டிநி றுக்குமெய்ந் நூனெறி.
72
   
  ஆய வித்தகு சீலம கம்புறம்
மாய மின்றிம லிந்திடின் மற்றது
தூய தேவகி ருபைச்சு கிர்தமென்
றேய தொண்டரெ டுத்திசைப் பாரரோ.
73
   
  விஞ்சத் தன்னைவி யந்துமெய் வேதநூல்
அஞ்சொற் கொண்டுப கட்டும ழிம்பர்தங்
கஞ்சப் புன்னடை காண்டொறுங் காசினி
வஞ்சப் புல்லரென் றெள்ளிடும் வையுமால்.
74
   
  மற்றிவ் வுண்மைம றுத்திடப் பாலதேற்
சொற்றி யென்னவுஞ் சொற்றிலை யாதலாற்
கற்ற றிந்துரை யாடுங்க ருத்தினோய்
செற்றம் விட்டிது செப்பெனச் செப்புவான்.
75
   
  உள்ளந் தேருநம் முன்னத தெய்வமுந்
தள்ள ரும்மனச் சாக்ஷியுஞ் சாக்ஷியா
வள்ள லாரருட் சத்தியுன் வாயிலோ
தெள்ளி துள்ளுஞ்சி றந்தனவோ சொலாய்.
76
   
  மெய்ய தாமருட் பேற்றினை மேதையோ
டைய மின்றிய நுபவித் தாய்தியோ
செய்ய வாய்மொழி போலநின் செய்கையுந்
துய்ய வாயின வோபிறி தோசொலாய்.
77