|
பத்தி
யுள்ளம்ப ழுத்துள தோவலாற்
கத்து வாய்மொழி மட்டிற்க னிந்ததோ
எத்தி றங்கருத் தியாவும்பு லப்படச்
சத்தி யம்புகல் வாயெனச் சாற்றினான்.
|
78 |
|
|
|
|
திருக்கி
லாரணன் செப்பிய செஞ்சொலாம்
உருக்கு செம்பலப் பன்செவி யூடுறீஇக்
கருக்கு சிந்தைய னாயகங் காந்தலிற்
பொருக்கெ னச்சில மாற்றம்பு கலுவான்.
|
79 |
|
|
|
|
கற்ற
தங்கைய ளவுகல் லாதவை
எற்று நீருல கத்தள வென்பர்மெய்
உற்ற றிந்தவர் நீயஃ தோரலை
முற்ற றிந்தனை போன்மொழி கிற்றியால்.
|
80 |
|
|
|
|
குப்பைக்
கீரைகொ ழுங்கவ டோச்சினுங்
கப்பற் பாய்மர மாகுங்க ணக்கதோ
செப்ப ருங்கலை தேரினு மெம்மனோர்க்
கொப்பு மோசிறி யாயுன்னு ரைத்திறம்.
|
81 |
|
|
|
|
பேச்சுக்
காலிற்பி ரானையி ழுப்பதுஞ்
சாக்ஷிக் காமனச் சான்றினைக் கொள்வதும்
மூச்சுக் காயயிரம் பொய்மொழி முந்தும்வெள்
வீச்சுக் காரர்கு ணத்தினின் வேறதோ.
|
82
|
|
|
|
|
தன்குற்
றங்களைத் தானற நீக்கிய
பின்குற் றந்தெரி வார்பிறர் பாலெனின்
என்குற் றமவர்க் கென்றுல கேத்துறும்
நன்குற் றார்சொலு நாடலை நம்பிநீ.
|
83 |
|
|
|
|
பாதை
காட்டும்வ ருத்தமும் பாழ்படும்
போது போக்குமுண் டாமெனப் புந்தியிற்
காத லித்துரை யாடக்க லந்தனன்
சாத முற்றத ருக்கியென் றெண்ணிலேன்.
|
84
|
|
|
|
|
கனவி
னுந்துயர் கண்டறி யாவொரு
பனவ னென்றுப குத்தறி யாதுநீ
மனவ ருத்தம்வி ளைத்திடும் வன்சொலால்
வினவு கிற்றியி தென்கொல்வி வேகமே.
|
85 |