|
முளைத்த
காதலின் வெதுப்புறீஇ முனம்பல ரோடித்
தளைத்த பாசத்தின் பிணிப்பினா லிடைக்கிடை தடுக்கிக்
களைத்து வீழ்ந்துயர் கதியிழந் தனரிது கருதி
இளைத்து நின்றிடா தோடுமின் றளைப்பன வெறிந்தே.
|
8 |
|
|
|
|
அலகை
யோச்சுதீக் குண்டினுக் ககப்படா தின்னும்
விலகி னீரலீர் வெங்கொடு வினைப்பகை வெறுத்துக்
கலக மிட்டுடற் குருதிநீர் கவிழ்தரக் கறுவி
உலகி டைச்சம ராடலீ ரின்றுகா றுரவீர்.
|
9 |
|
|
|
|
விட்பு
லத்தர சுரிமையை விழைந்தமெய் நோக்கந்
திட்ப மாகுக சிந்தனை மயலறத் தெருண்டு
கட்பு லப்படாப் பரமகா ரியங்களைக் கருதி
நட்பு ளீர்விசு வாசத்தி னனியுரத் திடுமின்.
|
10 |
|
|
|
|
விஞ்ச
மேல்வரு சோதனை யெவற்றினும் விரிந்த
நெஞ்ச மும்மத னிச்சையு நிகழ்த்துதற் கரிய
வஞ்ச கக்கொடும் பகைமையா மாதலின் மக்காள்
செஞ்செ வேதெரிந் தகற்றுமின் மற்றதன் றிருக்கை.
|
11 |
|
|
|
|
எட்ப
குப்பன சிறுமைய தாயினு மென்றும்
உட்ப கைத்திறத் துள்ளதாங் கேடென வுரைக்கும்
ஒட்ப நூன்மதி யுட்கொளீஇ யொல்லையி னூன்றிக்
கொட்பு றும்புலப் பகைதெறிற் கொற்றமுற் றிடுவீர்.
|
12 |
|
|
|
|
ஊன்ப
ழுத்தபூ மாயமொன் றானுமுள் ளுறாமே
நோன்பு பற்றிமுப் பகைத்திற மிருக்குமி னோன்பால்
வான்பு லிப்படும் வல்லமை யாவுநும் வசத்தாங்
கோன்பு கன்றமெய் வாக்கிது நெஞ்சகங் கொண்மின்.
|
13 |
|
|
|
|
இன்னு
மெம்வழிக் கெதிருறும் விக்கின மெவைமற்
றன்ன வற்றைமேற் கொள்ளுமா றெவன்வகுத் தறியப்
பன்னு கென்றிரே லருண்மறை பரமராஜ் ஜியந்தான்
இன்ன லூடறுத் தேகுவார்க் கெய்துமென் றிசைக்கும்.
|
14 |
|
|
|
|
ஐய
மின்றுமக் கெதிர்ப்படு நகர்தொறு மகோர
வெய்ய தீச்சிறை விலங்குபல் விக்கினம் விரவி
மையி ருட்படு மலையெனத் தொடர்ந்தெதிர் மலையும்
நொய்ய தித்துணை யடைந்தவை வருவன நுனிக்கின.
|
15 |