|
கைய
கன்றனிர் கானகந் துருவிமேற் கடல்சூழ்
வைய கத்துமா யாபுரி நகரிடை மறிந்து
வெய்ய கானவர் வலைப்படு மானென வெருண்டு
பொய்ய ரீட்டுவெங் கொடுமையிற் புன்கணுற் றிடுவீர்.
|
16 |
|
|
|
|
ஆற
லைத்துமை யடித்தப ராதரென் றதட்டிக்
கோற லைத்துணிந் தாக்குவர் கொடுஞ்சிறைப் புறத்தில்
மாற லைத்துறும் வம்பர்பொய் வாய்மையி னீதிக்
கூற லைத்தவன் முன்றிலி னிறுத்துவர் கொடியோர்.
|
17 |
|
|
|
|
மம்ம
ரில்விசு வாசத்தின் வலியசான் றாக
நும்மி லேயொரு வன்கதி கூடுவ னுதலிற்
செம்மை யுத்தம ராயிரும் ஜீவனுள் ளளவும்
நம்ம கீபதி நல்குவர் நலந்திகழ் மௌலி.
|
18 |
|
|
|
|
முன்கு
லாவிய நெறிப்படு மிடரெலா முயங்கிப்
பொன்கு லாநகர் புகுவதி லிடைப்படு புரைதீர்
வன்கொ லைப்படு வாதனை வரம்பறு மெனினும்
நன்க தாயசிற் சுகம்பெற லெத்தனை நன்றாம்.
|
19 |
|
|
|
|
விஞ்சு
பேரின்ப வீட்டுல குய்க்குமெய்ந் நெறிதான்
வஞ்ச மிக்கமா யாபுரி மறுகையூ டறுத்துச்
செஞ்செ வேசெலும் பிறிதொரு வழியிலை ஜெகத்துக்
கஞ்சி யோடுவ தெங்ஞன மாக்கையுள் ளளவும்
|
20
|
|
|
|
|
தம்ப
லக்குறை யுணர்ந்தருட் பலத்தையே சார்ந்திங்
கும்பர் நூனெறி யொழுகியோர்க் குறுபெறுந் துன்பம்
வெம்பு தீயேன முருக்கினு முன்னின்று விலக்கி
நம்பன் வானநாட் டுயர்பத நல்குவர் நமர்காள்.
|
21
|
|
|
|
|
துன்பம்
யாவையு மொருங்கறத் துடைப்பினுந் துடைப்பர்
அன்பின் மெய்விசு வாசத்தை யவனியிற் றெரிக்க
வன்ப கைப்புலத் தடியரை மடிப்பினு மடிப்பர்
என்பு ரிந்தென ரெம்பிரான் யாவுநன் றெமக்கே.
|
22 |
|
|
|
|
பந்த
நீங்குமுப் பகையறும் பாவசங் கடங்கள்
நந்து மெவ்வகை நலிவுமின் றுயர்கதி நன்மை
முந்து மாரண சாக்ஷியா முடுகியா ருயிரைச்
சிந்து தீரருக் குறுநலஞ் செப்புமா றரிதே.
|
23 |