|
தீத்தொ
ழிற்படு மாயையூர் சேருமக் காலை
கோத்து ரைத்தவென் வாய்மையைக் குறிக்கொடு கருதி
ஏத்த ருஞ்சரு வேசனா ரெழிற்றிருக் கரத்தும்
ஆத்து மங்களைக் கையடை யாக்குமி னஞ்சீர்.
|
24
|
|
|
|
|
என்ற
கத்துநல் லுணர்வெழ வின்னன தெருண்டு
கன்றி னுக்குளங் கசிந்திடு கறவையான் கடுப்ப
நன்று ளங்கொளுஞ் சொன்மதி புகட்டின னவைதீர்
குன்று றாநலங் குலவுமெய்ச் சுருதிதேர் குரவன்.
|
25 |
|
|
|
|
குரவன்
வாய்மையி னாசஞ் சீவியுட் கொண்டு
கரவி லாவிசு வாசமெய் யன்பொடு கவினி
விரவி யோங்கலின் வேதியர் விண்ணுல காளும்
புரவ லன்றிரு வடித்துணை பழிச்சினர் புகல்வார்.
|
26 |
|
|
|
|
எந்தை
நூனெறிக் கிடையிடை யெதிர்ந்தெமைத் தெருட்டி
அந்த மில்பர மானந்த மடையுமா றளித்த
விந்தை யாயபே ருதவியை வியந்தனு தினமுஞ்
சிந்தை யாரவுள் ளுவதலா லென்செய்கேஞ் சிறியேம்.
|
27 |
|
|
|
|
பொய்வ
குத்தபூ மாயமும் புலைமையும் போகத்
தெய்வ நிண்ணயந் தெரித்தனை ஜீவர க்ஷைக்காம்
மெய்வ குத்தனை மேல்விளை வனவெலாம் விரித்தாய்
உய்வ ழிப்படுத் துதவிமற் றிவற்றின்வே றுளதோ.
|
28 |
|
|
|
|
ஒவில்
பல்பெருந் துன்பமிக் குடற்றினு முருத்துப்
பாவ காரியர் செகுப்பினுந் தீவழிப் படரேம்
ஜீவ ரக்ஷணை தருகிறிஸ் தியேசுவே ஜீவன்
சாவு மூதிய மென்றொருப் பட்டனந் தக்கோய்.
|
29 |
|
|
|
|
வாழி
யையநீ புரிதிருப் பணிவிடை மல்கிப்
பாழி யம்புவி முழுவது மிரக்ஷணைப் பயன்கொண்
டூழி யூழிநின் றுயர்கவென் றுளங்குவிந் தேத்தி
ஆழி யானகர்க் கேகுது மருள்விடை யென்றார்.
|
30 |
|
|
|
|
அண்டர்
நாயகன் றிருவரு ளாக்கமு மடியார்
கொண்ட நல்வயி ராக்கியமுங் குணித்தருட் குரவன்
மண்டு மன்பினா சிகள்சொலி விடுத்தனன் மரபிற்
றொண்ட ரஞ்சலித் தேகினர் சுருதிமார்க் கத்தில்.
|
31 |