|
கடிம
திற்புறத் தகழிநீர் நிலையெனக் கருதி
நொடிவ ரன்றது மாயமாக் காரிரு ணுதலிப்
படியும் வானமும் வாய்மடுத் தோருழைப் பதுங்கிக்
குடிகொ ளுந்திரு வரங்கமே யதனிலை குணிக்கின். |
7
|
|
|
|
|
சஞ்ச
லஞ்செறி நிறையபா தலங்கொலோ சமைந்த
பஞ்ச பாதகப் படுகரோ பாரகம் பொதிந்த
வஞ்ச மல்குகா ராழியோ மதிற்புறம் வளைத்த
எஞ்சு றாததொல் லகழிமற் றியாதென விசைப்பாம்.
|
8 |
|
|
|
|
குருசு
யர்த்தபெம் மானடிக் கன்புசெய் குநர்தம்
பரிசி கழ்ந்தவ தூறுசெய் பாமரர் படர்ந்த
எரிசு லாநர கத்துநின் றேறினு மேறார்
புரிசை முற்றுபே ரகழியி னிடறிவீழ் புவியோர்.
|
9 |
|
|
|
|
பண்டு
கேடுசூழ் கொடுவிடப் பாந்தள்வாய் முழையோ
கொண்ட மார்க்கரை விழுங்குதீக் கும்பியின் குகையோ
மண்டு நித்திய மரணத்தின் மதகரோ வலகைத்
தொண்டை தான்கொலோ வாயிலையென்னென்த் துணிகேன்.
|
10 |
|
|
|
|
கேட்டி
னுக்கெலா மொருகுரு பீடமாய்க் கெழுமி
மேட்டி மைத்திட ராயகோ புரநிரை வியன்பொற்
கோட்டி மாசலக் குடுமியிற் கோநகர்ப் புரிசைக்
கேட்டு வாயிலிற் றிகழ்வன திசைதிசை கெருவி.
|
11 |
|
|
|
|
ஊழி
னாமென வுரப்பியோர் மடமையி னோங்கிப்
பாழி யம்பகு வாய்தொறுந் திகழுமுப் பரிகை
ஆழி பொங்கிமே லிடினிறு வாமென வஞ்சிப்
பூழி மானிடஞ் சமைத்தகோ புரமெனப் பொலிவ.
|
12 |
|
|
|
|
வன்மை
மல்குமூ தெயிற்றலை வாயில்க டோறும்
புன்மை மல்கிய பேதைமைப் பொறிகளே பொதுளித்
தின்மை யாவையும் விருப்பொடந் நகரிடைச் செறித்து
நன்மை யாவையும் புறப்பட நலிந்தெறிந் திடுமால்.
|
13 |
|
|
|
|
மரண
கண்ணிகள் வீசுதந் திரவலை மாயா
கரண வேதிகள் பாசங்க ளினையன கஞலி
முரணி வேதியர் குழுக்களை முருக்கியந் திரங்கள்
அரண வாயிலி னமைந்தெதி ரடர்ப்பன வனந்தம்.
|
14 |