|
அங்கண்
மாநிலந் திருத்தியூண் விளைத்தன வரதந்
தங்கள் காரிய துரந்தர ராக்குடி தழைப்பக்
கங்கை யின்குலத் துதித்தபூ வைசியராங் கபட்டு
வெங்க ணாளர்தம் மேனிலை மறுகெங்கு மிளிர்வ.
|
39 |
|
|
|
|
முந்து
முக்குலத் தவர்பணித் திடுதொழின் முழுதுஞ்
சந்த தம்புரி தந்துதந் தங்குல தெய்வம்
அந்த ணாளரென் றஞ்சலி யாக்கியு மடங்கிச்
சிந்தை கன்றிய சதுர்த்தர்வாழ் மனைகளுந் திகழும்.
|
40
|
|
|
|
|
கைத்தொ
ழிற்படு மாடகூ டங்களுங் கவினி
மொய்த்த யந்திர சாலையு முறைநெறி பிறழ
வைத்த நாடக சாலையும் பொதுப்படு மன்றுங்
குத்தி ரத்தொடு பயில்வன நகரிடைக் குழுமி.
|
41 |
|
|
|
|
இழிகு
லத்தரென் றேனையர் புறக்கணித் திகழுங்
கழிம டக்குடி யாளர்தஞ் சிந்தனை கன்றி
வழிவ ழிப்பகை கொண்டுவாழ் மனைச்சிறு குடிசை
பொழிலி டம்பெறு புறநக ரெங்ணும் பொலியும்.
|
42 |
|
|
|
|
திங்க
ளைக்கரி தாக்குவ செழுஞ்சுதைப் பித்தி
கங்கு லைப்பக லாக்குவ கணிகையர் கழகம்
மங்கு லைச்சிறி தாக்குவ மலிபுகைப் படலந்
தங்க ளைக்குரு டாக்குவ ரிந்தியத் தருக்கர்.
|
43 |
|
|
|
|
இருள்ப
டும்மரச் சோலையு மிருதயக் குகையும்
மருள்ப டுங்களி விழிகளு மதத்தநூன் மரபுந்
தெருள்ப டும்புவிக் கலைகளுங் கலவியின் றிருக்குஞ்
சுருள்ப டுங்குல மலர்களுந் துத்துவெள் ளடையும்.
|
44 |
|
|
|
|
கண்ணி
குத்றுவர் காமுகப் புள்ளினைப் படுப்பான்
வண்ண வாள்விழிப் பரத்தையர் மறுகெங்கு மருட்டி
நண்ணி யெத்துவர் மனைதொறு நயப்புரை பேசிப்
பொண்ணொ ழுக்கறு மாதரைக் காமப்பேய் பிடித்தோர்.
|
45 |
|
|
|
|
அங்க
மாமத வாரணத் தொனிபடு மல்லால்
அங்க மாமத வாரணத் தொனிபடா தாக
எங்கு மில்லொழுக் கிகந்தன வென்பதை யல்லால்
எங்கு மில்லொழுக் கிகந்தன விலையென லிலையால்.
|
46
|