|
மறங்கடைப்
பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி
அறங்கடைப் பிடியா ரென்னோ வழிமதி படைத்து மாயம்
பிறங்கிய மறுகு லாவிப் பேதுற்று வறிது மாள்வர்
கறங்கிசை யவாவி மாயுங் கேகயங் கடுப்ப மன்னோ.
|
79 |
|
|
|
|
தெருட்கடல்
படியாச் சிந்தை தீவினைக் கடற்கு ளுய்ப்ப
அருட்கடல் படியா ராகி யாசையங் கடற்குண் மூழ்கி
இருட்கடல் படுவ ரந்தோ விந்நக ரத்து மாக்கள்
மருட்கட லிகந்தா னந்த மாக்கடல் குளிப்ப தென்றோ.
|
80 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
நித்திய
லம்பவ ளஞ்செறி நீர்மையின்
பத்தி யாய்த்திரை நாடிய பான்மையின்
கத்து லப்பரி தாயக ணக்கினில்
தத்து நீர்க்கட லொக்குமச் சந்தையே.
|
81
|
|
|
|
|
படம்வி
ரித்துப் பஃறலை தோய்ந்துபே
ருடல்கி டத்தியு றுவன வாயிடூஉக்
கொடுவி டம்பொதிந் தாருயிர்க் கொள்ளைகொள்
நெடிய பாந்தளந் நீள்கடை வீதியே.
|
82 |
|
|
|
|
என்றி
லங்கவி லங்கெழின் வாய்நெகூஉ
மன்ற லார்ந்தளி மொய்த்தும துச்சொரிந்
தொன்று ளக்களி காட்டலி னொண்மறு
கன்ற லர்ந்தவ ருங்கடி மாலையே.
|
83 |
|
|
|
|
திசைமு
கந்திக ழப்பொருள் செய்தலின்
வசையின் மாயைவ ரம்பறு பான்மையின்
நசைபி றங்கமன் றாடிந் டித்தலின்
இசையு மம்மறு கிந்துமுத் தேவரை.
|
84 |
|
|
|
|
மூச்சுக்
காயிரம் பொய்படு முந்துபொய்ப்
பேச்சுக் காயிரம் பொன்படும் பேசும்வெள்
வீச்சுக் காயிரம் பொன்படும் வீச்சவா
யேச்சுக் காயிரம் பொன்படு மென்றுமே.
|
85 |
|
|
|
|
கோடி
கோடிகு விப்பன குத்திரங்
கோடி கோடிதொ குப்பன கோண்மொழி
கோடி கோடிதி ரட்டுங்கொ டுவினை
கோடி கோடிகு வைநிதிக் கொள்ளையே.
|
86 |