|
என்று
ளங்குவிந் தின்னன கூறலும்
நன்று நன்றுன்க டைப்பிடி நம்பியாம்
பொன்றி னும்மிடை யூறுபொ ருந்தினும்
மன்ற னாயகன் சித்தம கோத்தமம்.
|
8 |
|
|
|
|
வழும்பு
பட்டநம் மாக்கையும் வல்வினைத்
தழும்பு பட்டநம் மாவியுஞ் சார்ந்தவுந்
தொழும்பு பட்டவன் றேபர மன்சுதற்
கொழுங்கு பட்டன வொப்படை யாகவே.
|
9 |
|
|
|
|
நந்த
மக்கரு ணாதன்க ழல்புகுஞ்
சிந்தை யேயன்றிச் சிந்தைபி றிதிலை
முந்து வெங்கொடுந் துன்பமு ருக்கினும்
இந்த வாக்கையொ டேமுடி வெய்துமால்.
|
10 |
|
|
|
|
ஈறி
லாப்பர லோகவி ராஜ்ஜிய
ஆறு செல்லுது மாவன வாகுக
தேறு கையவெ னாவித்தி றத்தன
கூறி னான்மறை யோன்குணக் குன்றனான்.
|
11 |
|
|
|
|
இன்ன
வாறுரத் தின்னுரை யாடிநம்
உன்ன தேசனொ ருதிரு வோலக்கச்
சன்னி தானத்துத் தாழ்ந்துமன் றாடியே
சென்னெ றிக்கொடு போயினர் சீரியோர்.
|
12 |
|
|
|
|
நன்று
பேசிந ராத்தும ரக்ஷகன்
வென்றி யன்புவி ழுத்தவம் வித்தகம்
என்றிவ் வன்னவி சைபுனைந் தேத்தியே
சென்று கூடினர் மாயச்சி றைப்புறம்.
|
13 |
|
|
|
|
ஆழி
யன்னவ கழைய கப்புறஞ்
சூழு மேருவிற் றோன்றிய விஞ்சியை
ஊழி னோக்கியு யர்கடை வாயொரீஇ
வாழி யாரணர் புக்கனர் வஞ்சரூர்.
|
14 |
|
|
|
|
வண்ண
மேனிலை மாடங்கள் கூடங்கள்
எண்ணி றந்திரு பாலுமெ ழிறிகழ்
கண்ண கன்றக டிநகர் வீதிவாய்
நண்ணி நூனெறி நாடினர் போயினார்.
|
15 |