பக்கம் எண் :

359

  எங்கு செல்பவர் யாதுகு றித்துளார்
இங்கு வந்ததென் னோவென்றி யம்புவார்
துங்க யாத்திரை வேடஞ்சு மந்தலை
பங்க முற்றப திதரி வரென்பார்.

24
   
  வளவ னாயநம் மன்னவ னாட்டியல்
உளவ றிந்துழ லொற்றரி வரென்பார்
களவிற் காதல ரைக்கவர் வோரிவர்
கிளவி யாக்கங்கி ளக்கின்ற தீண்டென்பார்.
25
   
  ஒறுத்து நிந்தித்து ருத்துமண் ணோச்சினும்
பொறுத்து நம்மைப்பு றக்கணிப் பாரென்பார்
நிறுத்து நீதிநி கழ்த்துமின் னோரெலாங்
கறுத்த சிந்தையக் கள்ளுந ரேயென்பார்.
26
   
  வாக்கில் வேறலம் வன்றடி கொண்டியாந்
தாக்கி வேறுஞ்ச மைதிரென் பார்சிலர்
தாக்கி வேறல்ச மர்த்தன்று சாதிக்க
வாக்கின் றேற்பின்னை வாயென்னென் பார்சிலர்.
27
   
  வெய்து துன்பம்வி ளைப்பினுங் காக்கவோர்
பொய்சொல் லாதபு லையரென் பார்சிலர்
மெய்சி தைந்திடின் வேறுமுண் டோவொரு
செய்த வம்மது சீரிதென் பார்சிலர்.
28
   
  ஆக்கம் வேண்டிய றந்திறம் பேமெனாப்
போக்கு முட்டிய புல்லரி வரென்பார்
போக்கு முட்டின ரேனுநம் போற்செயார்
தீக்கொ டுந்தொழில் தேர்மினென் பார்சிலர்.
29
   
  வழிதெ ரிக்கும தியுடை யார்நமக்
கிழிகு லத்தர்கொ லோவென்ப ரோர்சிலர்
இழிகு லத்தரெ வர்பழி பாவத்தை
ஒழிகி லாதவ ரேயென்ப ரோர்சிலர்.
30
   
  இன்ன வாப்பெரும் பாலரி கழவும்
மன்னி யோர்சிலர் தட்டிம றுக்கவும்
நன்னர் நூனெறி நாடியவ் வேதியர்
துன்னி னார்கொடுஞ் சூனிய வாவணம்.
31