பக்கம் எண் :

361

  சற்று நின்மெனச் சாற்றியங் கோர்சிலர்
உற்று முன்வந்து யர்தவ வேடத்தீர்
சொற்ற சத்தியம் யாதது சொன்மினோ
நற்றி றத்தைந யக்குதும் யாமென்றார்.

40
   
  வினவு மாற்றநன் றாமென மெய்யுணர்
பனவ விப்படு பாதகச் சேரியிற்
கனவி லுங்கரு துற்றில னித்தகு
மனவு ணர்ச்சியுண் டென்றும திவலோய்.
41
   
  வஞ்ச மாயக்கி டக்கைம றிந்துகண்
துஞ்சு மாந்தர்தொ குதியுள் ளுஞ்சிலர்
விஞ்சு சத்திய வாக்கம்வி னாவுநன்
னெஞ்சு ளாரென நேருறக் கண்டனம்.
42
   
  தீண்ட ரும்பெரு மாயச்செ ருக்குளார்
மூண்டு ருத்துயிர் மோசம்வி ளைப்பினும்
ஈண்டு சத்தியம் யாமெடுத் தோதலே
வேண்டு மென்றுது ணிந்தனன் மேலையோய்.
43
   
  அங்கண் வானத்த ரசிளங் கோமகன்
உங்க ளோடுல குள்ளள வும்முளேன்
எங்கு முண்மையி யம்புமி னீரென்ற
துங்க வாசகஞ் சோர்வுறு மேகொலாம்.
44
   
  செய்ய வல்லசெ யக்கெடுஞ் செய்வன
செய்ய லாமையி னுங்கெடுந் தேர்கெனா
வைய கத்துநன் னீதிவ குக்குமால்
ஐய நின்கருத் தியாதென வந்தணன்.
45
   
  நன்று சொற்றனை நம்பிநி தானிநீ
என்ற னுள்ளுறை யும்மிது வேயெனா
முன்று னும்ஜெக மாயைமு யக்கருக்
கின்று மெய்ம்மையி சைத்துமென் றொல்லையே.
46
   
  மாத யாதிரி யேகம கத்துவர்
பாத பங்கஜங் கிட்டிப்ப ராவினார்
ஏத மற்றவி ரக்ஷண்ய மாநவ
நீத சத்தியங் காட்டிநி கழ்த்துவார்.
47
   
                 நகர்புகு படலம் முற்றிற்று.