|
இச்சை
யோடந் நியமாத ரெழிலைக் கருதி நோக்கிடுவோன்
துச்சாரிகள்பங் கடைவனென்ற தூயோ னருளைத்
துணைக்கொண்டு
சிச்சீயெனத்துரிச் சையெலாஞ்சேர வெறுத்துச் சீத்துவிட்டுக்
கொச்சைமதியையகற்றியெம்மான் குணஞ்சார்ந் தொழுகும்
ஜெகத்தீரே.
|
16 |
|
|
|
|
மீளா
நரகுக் காளாக்கும் விபசா ரத்தீ வினைபுரிந்து
வாளாப் பரமா னந்தசுக வாழ்வை யிழத்தன் மதியாமோ
நாளா ரம்பத் தயல்தூற்ற நாண மழிந்து நகைக்கிடமா
மாளா முன்னே கிறிஸ்தியேசு மலர்த்தாள் வணங்கும் ஜெகத்தீரே.
|
17 |
|
|
|
|
எங்குந்
தமசந் நிதியாக விருக்குங் கடவுள் களவான
பங்க வினைசெய் யாதிரெனப் பகர்ந்த துணர்ந்து பரபொருளைச்
சிங்கி யெனவேவெறுத்தயாச் செல்வம்வழங்குங் கிறிஸ்துவெனும்
மங்காப்பொருளையடைந்து நித்யவாழ்வை யடைமின் ஜெகத்தீரே.
|
18 |
|
|
|
|
பொய்யைப்
புகலா திருங்களெனும் புனிதன் புனித கற்பனையை
அய்யோ நினையா தவமதித்தீ ரல்லும் பகலு மனவரதந்
துய்யமனச் சாட்சியைமழுக்கித் துணிந்துமுழுப்
பொய்சொல்லுகின்றீர்
உய்யீ ருய்யீர் மெய்பேசி யுய்ய வாரும் ஜெகத்தீரே.
|
19 |
|
|
|
|
பொய்மை
தானும் வாய்மையதாம் புரைதீர்நன்மை பயக்குமெனின்
மெய்மை யாவ தெத்தீங்கும் விளையா துரைத்த லெனுங்குறளின்
நொய்மை யுரையைத் தவிர்த்துள்ள துள்ள படியே நுவலுமென்ற
தெய்வ வுரையைக் கடைப்பிடித்துச் சேர வாரும் ஜெகத்தீரே.
|
20 |
|
|
|
|
நெஞ்சுத்
துணிவாய்ப் பொய்பேசி நேச மொருவி யந்நியரை
வஞ்சித் தொழுகு மதியிலிகாண் மனாதி யறியு மகாதேவன்
கிஞ்சித் தேனும் விடாதுநும்மைக் கேட்குங் காலங் கிட்டுமுனம்
அஞ்சித் தீமை யகற்றியெம்மா னடிசார்ந் துய்மின் ஜெகத்தீரே.
|
21 |
|
|
|
|
விரிவெள்
ளரியங் கனிக்கிருப்புப் பூண்கட் டிடுமவ் விதம்போல
ஒருபொய் நிலைக்க வாயிரம்பொய் யுரைக்கவேண்டு
முரைத்
தாலும்
வருமே வெளிக்கு வரிலதிக மானக் கேடே மறுமையினும்
எரிவாய்ப் படுக்குமிதை விடுத்தெம் மிறையைத் தொழுமின்
ஜெகத்தீரே. |
22 |
|
|
|
|
அனைத்து
முடையான் பிறருடைமை யான வெதையு மாசையுடன் நினைத்தி டாதே யெனவிரித்து நிகழ்த்துங்
கடைசிக் கற்பனையை மனத்து ளிருத்தி யவரவர்க்கு வகுத்த வளவின் மகிழ்ந்துசொற்பத்
தினத்தைக்கழித் தெம்மானருளும் ஜீவனடைமின் ஜெகத்தீரே. |
23 |