ஜீவ
னெமக்குக் கிறிஸ்தியேசு தேக பந்தந் தீர்க்கவரு
சாவு மெமக்கா தாயமென்று சான்றோ ருலக சாலமெலாம்
மேவா வண்ணங் கடைப்பிடித்த விசுவா சத்தை விரைந்தறிந்து
சாவா முன்னச் சுதன்றிருத்தாள் சார வாரும் ஜெகத்தீரே.
|
80
|
|
|
அன்பு
மயமாந் திருமேனி யருளுக் குறையுள் திருநயனம்
இன்பு தருமெய்ச் சஞ்சீவி யெழில்வாய் கனியுந் திருவாக்கு
மன்பூ வுலகுக் கஞ்சலென வழங்கு மபய வரதாஸ்தந்
துன்பேனுமக்கிவ் வெம்பெருமான் றுணைத்தா டொழுமின்
ஜெகத்தீரே.
|
81 |
|
|
இரும்போ
நெஞ்ச மின்னுந்தா னிளக விலையோ வீண்டுசற்றே
திரும்பிப் பாரு முமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன்
பெரும்பா தையைவிட்டிடுக்கவழி பிரவே சியுங்கள் பிழைப்பிரென
விரும்பி யழைத்து வருகின்றார் விரைந்துவணங்கும் ஜெகத்தீரே.
|
82 |
|
|
ஜீவன்
பிழைக்க மகவளித்த தேவே தந்தை தியாகேசன்
பாவ நிவிர்த்தித் துமைப்பரம பதத்திற் கூட்டுந் துணைபுனித
ஆவி சுருதி யமிழ்தூட்டு மன்னை மெய்வே தியருறவோர்
தேவ குடும்ப மிதைவிரைந்து சேர வாரும் ஜெகத்தீரே.
|
83 |
|
|
ஒன்று
நினைமி னராத்துமங்க ளூர்த்த கதிசேர்ந் துயவேண்டின்
என்று மேசுக் கிறிஸ்துநல்கு மிரக்ஷண் ணியபுண் ணியபலத்தால்
அன்றி வேறு வழியிலையீ தனந்த தரஞ்சத் தியமதனால்
இன்றே யந்த விரக்ஷகனை யிறைஞ்ச வாரும் ஜெகத்தீரே.
|
84 |
|
|
ஏழை
யடியோ முக்காக விரங்கி யிரக்ஷண் ணியகிரியை
தாழ்வின் றமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே
ஊழி யூழி யிராஜ்ஜியமு முலவாக் கனமு முள்ளபடி
வாழி வாழ யென்றேத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே.
|
85 |
|
|
இரக்ஷணிய
நவநீதப் படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
அத்தகு
வேதிய ரான்ப ரக்ஷையின்
சத்தியந் திகழ்த்திய தகைமை சாற்றினாம்
மத்தமா யாபுரி மாக்கண் மற்றவர்க்
குய்த்ததீக் கொடுஞ்சிறை யுரைத்து மேலரோ.
|
1 |