|
கலகமெங்
கெனவரைக் கச்சை கட்டியங்
குலவிய மூர்க்கரவ் வுரைகொண் டொல்லையே
உலகையுள் ளுவர்த்திடு மொள்ளி யோர்தமை
விலகறப் பாசமிட் டிறுக்கி வீக்கினர்.
|
10 |
|
|
|
|
வெய்துற
வடித்தனர் குருதி மேலிடப்
பொய்துறு வசைமொழி புகன்று போர்த்தனர்
மெய்திகழ் முகத்துமிழ்ந் துறுமி வீம்புற
வைதன ரவமதித் திகழ்ந்து வம்பரே.
|
11 |
|
|
|
|
இத்திற
வின்னல்பற் பலவி யற்றிமெய்
உத்தம ரிருவரைக் கொடுசென் றோங்கிய
சித்திர நீதிமன் றணைந்து செவ்வியோய்
குத்திர மாயவர்த் தகர்நுங் கோற்குடி.
|
12 |
|
|
|
|
இங்கிவர்
தமைமறு கெதிர்ந்து கண்டனம்
பங்கமில் சத்தியம் பகரு வாமென
அங்கது தெரித்திரென் றவாவிக் கேட்டனர்
நங்களி லொருசிலர் நவிற்சி தேர்ந்தனம்.
|
13 |
|
|
|
|
பொருவின்மா
யாபுரிப் புகழும் பொற்புமெய்த்
திருவும்லௌ கீகசிற் றின்பச் செவ்வியும்
மருவிய வரம்பறு நிதியின் மாட்சியும்
பருவரற் படுகரிற் கவிழ்த்தும் பாலவாம்.
|
14 |
|
|
|
|
கைப்படு
காமியங் கருத்தி னீந்தருள்
மெய்ப்படு நந்தம்விக் கிரக தேவரும்
மைப்படு சமயநூன் மரபு மார்க்கமும்
பொய்ப்படு கெடுமுறைப் புலமைத் தாயவாம்.
|
15 |
|
|
|
|
கலைபொருள்
புகழ்பலங் கவின்கொள் காத்திரங்
குலநல முதலிய யாவுங் குப்பையாம்
வலையன மனைமகார் மருங்கு வாழுநாள்
நிலையிலா நீரெழுத் தனைய நீரவாம்.
|
16 |
|
|
|
|
இன்னவோ
மநுக்குலத் தெவரு மீசனாம்
பொன்னுல காளிசொற் போற்றி டாதுதந்
துன்னெறி யொழுகிய தூர்த்த ராமினி
மன்னுகோ பாக்கினி மழையும் பெய்யுமாம்.
|
17 |