பக்கம் எண் :

375

  எத்திற முய்வெனி னிகல்செய் தீக்குணங்
கைத்தழு துணர்வொடு கருணைக் கோமகன்
மெய்த்தொழும் பாய்விதி விலக்கை யோம்பிடின்
நித்திய ஜீவநன் னிலையு நேருமாம்.

18
   
  ஈதெலா முத்திநாட் டிறைவவ னொப்பிடு
மேதகு விளம்பர மெனவிவ் வீம்பரே
போதனை செய்தனர் புரளி போர்த்தலின்
ஊதிய மிழந்ததெம் முலப்பில் வர்த்தகம்.
19
   
  மாயவர்த் தகத்துள மகிமை தேய்ந்தது
மேயவூ ரினும்பிரி வினையுண் டாயது
நாயகத் துவங்களி னாற்ற மிக்கன
ஆயகா மியமரு வருக்க லாயின.
20
   
  பஞ்சபா தகத்தையும் பறக்க டிக்குநம்
மஞ்செழுத் தெட்டெழுத் தாற்ற லோர்கிலார்
நஞ்செய னாசத்தை நனிவி ளைக்குமென்
றஞ்சுறா திகழ்ந்தெமை யவம தித்தனர்.
21
   
  ஆதலிற் றண்டனைக் கருக ரென்றியாம்
நீதியா சனத்தின்முன் னிறுவி னேமெனா
ஓதினா ருரத்துரத் துருத்துப் பன்முறை
சாதகத் திரளெனத் தறுக ணாளரே.
22
   
  ஆங்கவ ருரைசுடு முகனென் றாசன்த்
தோங்குநீ தாதிப னுரித்திற் கேட்டனன்
வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர்
பாங்குறத் திருமிமற் றினைய பன்னுவான்.
23
   
  உலகெலா மவமதித் தொழுகும் புந்தியீர்
கலககா ரணரெனக் கட்டுண் டெய்தினிர்
பலகலை பயின்றுபாழ் பட்ட தேகொலாம்
இலகுநன் மதியினி யுய்வ தெங்ஙனம்.
24
   
  தங்குமூர் யாதிவண் சார மூலமென்
எங்கனா சாரவே டத்தோ டேகுவீர்
இங்குவந் தித்துணைக் கலக மீட்டிய
நுங்கருத் தியாதது நுவலு வீரென்றான்.
25