பக்கம் எண் :

379

  நறைகமழ் சோலையை நயமின் மன்னவன்
முறைபிறழ் முன்றிலை முரண்கல் வாரியை
இறையக லாதுளத் தெண்ணு நீரரை
சிறைமறி துயரெது செய்யத் தக்கதே.

51
   
  ஜீவர க்ஷணியமாச் சிறைபு குந்தினி
ஓவலி லானந்த போக முண்பதற்
காவலித் துடற்பொறை யற்ற நாடியோர்
நோவுறு சிறைத்துயர் நுனிக்கற் பாலரோ.
52
   
  துன்புழந் தன்றியெட் டுணையின் பின்றெனா
மன்பதைக் கிகத்தியல் வரைந்த சாசனம்
நன்புலத் தாக்கிய நவையில் வேதியர்க்
கின்பிலுந் துன்பினி தென்று நாட்டமே.
53
   
                    வேறு.
   
  பருவரல் சுவைப்பா லுண்டி படர்கணீர் பருகும் பானம்
வருமவ மதிப்புப் பொற்பூண் வசைமொழி மதுர கீதம்
மருவுபூ வடுக்கு மெத்தை மௌனநித் திரைவண் செல்வத்
திருவநீண் மாடம் வெய்ய சிறைப்புறஞ் செவ்வி யோர்க்கே.
54
   
  தள்ளருந் துயரஞ் சித்த சஞ்சலந் தாபந் துக்கம்
விள்ளருந் துன்ப மாய வேதனை யுழக்கும் போதும்
எள்ளரும் விசுவா சத்தோ டிரமியந் தழுவிப் பல்கால்
உள்ளுவந் தேத்திப் போற்றி ஜெபிப்பருன் னதத்தை நோக்கி.
55
   
  உற்றமெய்க் குரவன் வாய்மை யுள்ளிமற் றெம்மின் முந்திக்
குற்றமில் குருதி சிந்திக் குவலயத் தொல்லை நீந்தி
முற்றுபே ரின்ப லோக முத்திவீ டடையத் தக்கான்
நற்றவ முடைய னென்னா நச்சியேக் குறுவர் நல்லோர்.
56
   
  கோறலுக் கிலக்காய் நேர்தல் குறிக்கொண்டு விசுவா சத்தின்
ஆறொழுக் கிழுக்கா வண்ண மருட்டுணை யெடுத்துப் பேசி
ஊறுமெய் யன்பி னாலே யொருவரை யொருவ ரூன்றித்
தேறுதல் புரிந்து சிந்தை தெருட்டுவர் திருவாக் கூட்டி.
57
   
  நாடுவர் சருவ லோக நம்பனைக் கருணைப் பௌவத்
தாடுவர் தெவிட்டா வுண்டி யருந்துவ ராரக் கீதம்
பாடுவர் துதித்துப் போற்றிப் பவித்திர பதாம்பு ஜத்துச்
சூடுவ ரன்பிற் கட்டித் தொடுத்தபைந் துணர்த்தே வாரம்.
58