பக்கம் எண் :

382

 
நிதானி கதிகூடு படலம்
 

   
  அவ்விய மவித்த சிந்தை யருந்தவ ரிவ்வா றாகத்
தெவ்வியற் சிறையை மேலாம் ஜெபதபப் பள்ளி யாக்கித்
திவ்விய வழிபா டாற்றிக் கழித்தனர் சிறிது திங்கள்
இவ்விய லறிந்தவ் வூர்சூழ் வினைத்திற மியம்ப லுற்றாம்.
1
   
                   வேறு.
   
  குத்திரப் புரியுலாங் கொடியவர்த் தககுழாம்
அத்தலத் தரசன்மா டணுகியா ரியர்தமக்
கெத்திறத் தினுமுயிர்க் கிறுதிசெய் திடவெமக்
குத்தரந் தருகெனா வூக்கினார் மூர்க்கமாய்.
2
   
  நன்றுசெய் குதுமென நவிலறப் பகையெனுங்
கன்றுவெஞ் சினமுகக் கரியனான் கடுகிநீர்
புன்றலைப் பதிதரைக் கொணர்கெனாப் போக்கினான்
வன்றலைப் புலையராம் வயவரோர் சிலரையே.
3
   
  ஈதலால் வேதியர்க் கெதிர்விரோ தக்கரி
ஓதுவா ரெவரவ ரொல்லையிங் குறவுடன்
வீதிதோ றும்பறை யறைகெனா விண்டுதான்
ஏதநீ தாசனத் தேறினான் சீறினான்.
4
   
  சுடுமுகத் துணைவனுந் துன்முகக் கபடனுங்
கடுவிடத் தகமுகக் கண்ணலாற் கண்ணிலா
நடுவர்பன் னிருவரு நரைதிரைக் கிழவருங்
கொடுமையின் குலமெனக் கூடினார் கேடினார்.
5
   
  கிழக்குமேற் கிலர்தமைக் கெடுவழித் தலைவிடுத்
துழக்கிலே கிழக்குமேற் குரைத்துரித் துளவெலாம்
வழக்கிலே யிழுக்கும்வீண் வாக்குநை யாயிகச்
சழக்கரும் வழக்கருந் தழுவினார் குழுமினார்.
6
   
  ஆரியப் பகைவர்தம் மாருயிர்க் கிறுதிசெய்
காரியப் பொறையொருங் கெமதெனக் கறுவிவெம்
பூரியப் புலமைதேர் பொய்க்கரித் திரள்குழீஇ
வீரியத் துடனவை விரவினார் கரவினார்.
7